அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
உத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 24, 2017

மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!



மணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

ஒருவனுக்கு திருமண வாழ்வு என்பது எவ்வளவு சந்தோசத்தையும் அவனுடைய வாழ்வில் உற்சாகத்தைத் தந்து அவனுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறதோ அதுபோலவே அதே திருமணம் ஒருவனுடைய வாழ்வையே கேலிக்குரியதாக ஆக்கி, அவனுடைய முன்னேற்றத்தையே முடக்கி ஒருவனை செயலற்றதாகவும் ஆக்குகிறது. அதற்காக மனித இனம் பல்கிப்பெருகுவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருமண உறவுமுறையை ஒருவன் புறக்கணித்து வாழவும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை!

செவ்வாய், ஜனவரி 10, 2017

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்

“என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.
இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.

வியாழன், ஜூலை 07, 2016

உத்தமப் பெண்களின் உரிய குணங்கள்...

உத்தமப் பெண்களின் உரிய குணங்கள்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மானத்தையும், கற்பையும் போற்றிக் காப்பவள்தான் உத்தமி! அவள்தான் பெண்களில் உயர்ந்தவள்!!  எந்த ஆணையும் ஏறிட்டுப்  பார்க்காது, யாரிடமும் எவ்விதப் பேச்சும், பழக்கமும் இராதவர்களுக்கு வேறு இந்தப் பெண்ணும் நிகராக முடியாது. ஆண்களை  'அழகு' என்ற இரை  போட்டு இழுக்கும் தூண்டிலாகப் பெண்கள் இருக்கக்கூடாது. தீய எண்ணத்தோடு பார்ப்பவளையும், கெட்ட  எண்ணத்தோடு பேசுபவனையும் அவளுடைய நடத்தை தலைகுனிய  வைக்கவேண்டும். தன்மான உணர்வு உடைய ஒவ்வொரு பெண்ணும், தன்னுடைய செயலை மார்க்கம் என்ற உரை கல்லில் உரசிப் பார்க்க வேண்டும்.