உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்
உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில்
சிறுவர்
துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக்
கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது?
என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு
வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு
இல்லையென்றாலும்,
சிறுவர்களும்
துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத்
தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப்
பார்வையில் இருந்து
பிள்ளைகளைப் பாதுகாப்பதே
சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப்
பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை
விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.