அன்பான நல்ல உள்ளங்களே! இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கு ஏத்தி வையுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்! |
“கொடுத்தால் கிடைக்கும்…..”
மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் அன்பையும் பிரியத்தையும் அடைவதற்கான வழிகளை குறித்து இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.
பிறருடைய தேவையை அறிந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பதும் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். ஒருவர் தனது தேவையை நம்மிடம் எடுத்துச் சொன்னதும் எந்த அளவு நாம் அவருக்கு நிறைவு செய்ய வேண்டும்.
ஒருவர் தன் தேவையை நம்மிடம் வெளிப்படுத்துவதற்கு முன்பே அதை நாம் உணர்ந்து அவருக்கு உதவினால்
அது அவர் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அவருடைய பிரியத்தை கூடுதலாக கிடைக்கச் செய்யும்.
பிறருடைய தேவையை நிறைவேற்றுவது என்பதில் அவருடைய பொருளாதார தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி எதையேனும் இரவலாக கொடுத்து உதவுவது, நமது உடல் உழைப்பின் மூலம் உதவுவது, அவருக்காக சிபாரிசு செய்வது உள்ளிட்டவை அடங்கும்.