அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
கண்ணியமிக்க இஸ்லாமியர்களே! இறைவன் மனிதனின் செயல்களனைத்தையும் உற்றுநோக்குகிறான். மனிதனின் எச்செயலும் இறைவனின் கண்காணிப்பை விட்டும் தூரமாகி விடாது. மனிதனின் வெளிக்கோலத்தை இறைவன் கவனிப்பது கிடையாது. அவனின் [மனிதன்] உள்ளத்தையே உற்று நோக்குகிறான். இதனாலேயே உள்ளத்தால் உயர்ந்தவனே உங்களில் மிகச் சிறந்தவன் என்று பெருமானார் [ஸல்] அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஒவ்வொரு செயலும் அவனின் எண்ணத்தைப் பொறுத்தே சிறப்புறுகின்றது. என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இறைவன் தன் திருமறையில் நிச்சயமாக அந்தரங்க சுத்தியோடு இறைவனைப் பயந்து நடந்த நல்லடியார்களுக்கு மன்னிப்பும் உயர்ந்த கூலியும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறான்.