அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
எட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 17, 2016

எட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்..


அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
கண்ணியமிக்க இஸ்லாமியர்களே! இறைவன் மனிதனின் செயல்களனைத்தையும் உற்றுநோக்குகிறான். மனிதனின் எச்செயலும் இறைவனின் கண்காணிப்பை விட்டும் தூரமாகி விடாது. மனிதனின் வெளிக்கோலத்தை இறைவன் கவனிப்பது கிடையாது. அவனின் [மனிதன்] உள்ளத்தையே உற்று நோக்குகிறான். இதனாலேயே உள்ளத்தால் உயர்ந்தவனே  உங்களில் மிகச் சிறந்தவன் என்று பெருமானார் [ஸல்] அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஒவ்வொரு செயலும் அவனின் எண்ணத்தைப் பொறுத்தே சிறப்புறுகின்றது. என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இறைவன் தன்  திருமறையில்  நிச்சயமாக அந்தரங்க சுத்தியோடு இறைவனைப் பயந்து நடந்த நல்லடியார்களுக்கு  மன்னிப்பும் உயர்ந்த கூலியும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறான்.