அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன் தான்,, அவனைத் தவிர வேறு நாயனில்லை ,, அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் .
அல்குர் ஆன்..2..163]
விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர் ...
முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும்.அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடப்பார்.
உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி [ஸல்] அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.