அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 18, 2016

எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள்

எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

எந்த மனிதர் [இறைவனின் கட்டளைகளுக்கு] மாற்றம் செய்து உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக அவர் மேலும் ஸ்தலம் நரகமாகும்  என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

மேல் குறிப்பிட்ட திருமறை வசனத்தில் உலக வாழ்க்கையைப் பற்றி இறைவன் குறிப்பிட்டுள்ளான் . ஏனென்றால் உலக வாழ்க்கையின் மோகம் தான் மனிதனின் ஒவ்வொரு பாவங்களுக்கும் மூலவேராக இருக்கிறது. உலகத்தின் இன்பத்தை காட்டித்தான் ஷைத்தான் மனிதனை ஏமாற்றுகிறான். இதனாலேயே உலகத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.