அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
குரானும் சிபாரிசு செய்யும்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குரானும் சிபாரிசு செய்யும்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 17, 2016

திருக்குர்ஆனை ஓதுவோம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று குர்ஆனை ஓதுவது.
நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். “உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். “உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : முஸ்லிம்

புதன், மே 04, 2016

நோன்பும்,குர்ஆனும் சிபாரிசு செய்யும்...

நோன்பும், குர்ஆனும்   சிபாரிசு செய்யும்...
அல்லாஹ்வின் திருபெயரால்..
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்.. நோன்பும் குர்ஆனும்   இறைநம்பிக்கையாளர்களுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு கூறும்..  ''என் இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் தடுத்தேன்,, அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' திருக்குர்ஆன் கூறும்.. ''நான் இவனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன் [தன்  இனிய உறக்கத்தைத் துறந்துவிட்டு இவன் தொழுகையில் திருக்குர்ஆனை  ஓதிய வண்ணமிருந்தான்] எனவே இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!'' அல்லாஹ்  இவ்விரண்டின் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வான்.
அறிவிப்பாளர்.. அப்துல்லாஹ் பின் உமர் [ரலி]
நூல் மிஷ்காத்]