அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
கொரோனா வைரஸ் : அச்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ் : அச்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 25, 2020

ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..



ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..

ஒரு நாள் இரவு...  மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள் 

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன 

மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். 

எதற்கும் பலன் இல்லை .

வெள்ளி, மார்ச் 13, 2020

கொரோனா வைரஸ் : அச்சம் , பயம், பீதி =மரணம்



இன்று உலக முழுதும் பேசப்படுகின்ற ஒரு செய்தி என்றால் அது இந்த தொற்று நோய் பற்றி தான் !  இந்த கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வதைவிட கேலி கிண்டலும் செய்வதுதான் அதிகம்! ஒரு பக்கம் சிலருக்கு பயம் , அச்சம் . இன்னொரு பக்கம் இதைப்பற்றி டிக்டக் கேலிக் கூற்று நடக்கிறது. சிலருக்கு இறைவனின் சோதனை விளையாட்டாக இருக்கிறது! இன்னும் சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கிறது! சிலர் வரம்புமீறி செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது! இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களுக்கு இறைவனின் வல்லமை பற்றி தெரியாமல் இறைவனைப் பற்றி கிண்டல் செய்கிறார்கள். இறைவன் யார் ? அவனின் வல்லமை என்ன ?  அவனால் முடியாதது எதுவும் உண்டா ?  அவன் அறியாமல்  இந்த உலகத்தில் ஏதாவது நடக்கிறதா ? அவன் நாடாமல் மனிதனுக்கு துன்பம் வருகிறதா ? படைத்தவன் யார் ? படைப்புகள் யார் ? இதெல்லாம் அறியாமல் , புரியாமல் பெரும்பாலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் !