குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்?
• இன்றைய ஸ்மார்ட் போன் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் எல்லாம் குழந்தைகள் அழுதால் தாய் தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தங்களது ஸ்மார்ட் போனை அவர்கள் கையில் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்.
• கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தையை சமாளிப்பதற்காக ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்துவிட்டு அவர்கள் கையில் கொடுத்துவிடுகின்றனர். அதனால் குழந்தைகள் பல மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர்.