அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
சுவர்க்க வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவர்க்க வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 20, 2014

மறுமை வாழ்வு

ஆராய்ச்சி மற்றும் பகுத்தாய்வு அடிப்படையில் கிடைக்கப் பெறும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. ஆகவே, இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும், பகுப்பாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடோ நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமானதொன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் மனிதர்களை இறைவனை வணங்குமாறும் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வில் நம்பிக்கை கொள்ளும்படியும் போதித்து வந்துள்ளனர். மறுமை வாழ்வின்மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழிவகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொறுளற்றதாக்கி விடும் எனும் அளவுக்கு அவர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டுகால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வை அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இடைவெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்கவேண்டும். அனைத்து இறைத்தூதர்களும் பெரும்பாலும் மக்களின் எதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கியக் காரணம் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மக்கள் மறந்ததுதான். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால் அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையிலும் ஏராளமான நல்லறத்தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக்கொள்கைகள், குலப்பழக்கவழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இவைகளிலிருந்து மாறுபட்டதோடல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியார்களுக்கு அளித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது. தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமைப்படுத்தியது எது? பதில் மிக எளிது. அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தைப் புலனறிவின் மூலமாகவா உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு, ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலங்களால் உணர முடியாத விசயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.

ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள் ,, அதிகமாக அழுவீர்கள்

 நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள்! அதிகமாக அழுவீர்கள் .. அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே !

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..

நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள்,, அதிகமாக அழுவீர்கள்.
இதை அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டள்ளது.     சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது .
இதை அபூஹுரைரா [ஸல்] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் ..புகாரீ]

திங்கள், ஜனவரி 20, 2014

கேள்வியும் பதிலும்!




அல்லாஹ்வின் திருபெயரால் ...
நமக்கு ஒரு நல்லது நடந்தால் நாம் சந்தோசபடுகிறோம் மாறாக நமக்கு ஒரு சோதனை வந்தால் அழுது புலம்பி பெரிய ஆர்பாட்டம் செய்கிறோம் . இது மனித இயல்பு என்று கூட சொல்லாம் . ஒரு முஃமினுக்கு எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் " என்று சொல்வார் . இது ஒரு முஃமினின் பண்பு .

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

பிரார்த்தனை அதன் சிறப்பும்,மாபெரும் செல்வமும்.




அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

உண்மையில் "துஆ " என்பது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் செல்வம், அறிய அருட் கொடை; விசேஷபாக்கியமாகும். துஆவைக்  கொண்டு அல்லாஹ்விடமிருந்து  நாம் இம்மை  மறுமையின் சகல தேவைகளையும் நிச்சயம் அடைந்து கொள்ளலாம் .
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினரை , உலகப் பொருட்களுக்கோ உலகச் செல்வங்களுக்கோ  அடிமைப்பட்டு , அவைகளை எதிர் பார்த்து வாழ்பவர்களாக ஆக்கி செல்லவில்லை . மாறாக நம்மையெல்லாம் துஆக்காரர்கலாக ஆக்கி சென்றுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அமல்கள் யாவற்றிலும் துஆ இல்லாத அமல் ஒன்றுமே இல்லை . சாப்பிடும்போதும் , தூங்கும் போதும் , வீட்டில் நுழையும் போதும் வெளியேறும் போதும் மஸ்ஜிதில் நுழையும் போதும் , வெளியேறும் போதும் , தொழுகையிலும் , தொழுகைக்குப் பிறகும் , நோன்பிலும் , ஹஜ்ஜிலும் , மலஜலம் கழிக்கச் செல்லும் போதும் இவ்வாறாக எல்லா அமல்களிலும் துஆச் செய்யும் வழிமுறையை கற்றுத் தந்துள்ளார்கள் . ஆகையினால்தான்  " துஆவைக் காட்டிலும் அல்லாஹ்விடம் ஏற்றமானது வேறு ஒன்றுமில்லை " என்று கூறப்பட்டுள்ளது . மேலும் , 'துஆ  முஃமினின் ஆயிதம் , தீனின் தூண் , விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளி " என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .

ஞாயிறு, மே 19, 2013

சுவர்க்க வாழ்வு


சுவர்க்க வாழ்வு



நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133
இவ்வுலகில் வாழ்கின்ற நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.
சுவர்க்க வாழ்வு
என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது’ என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)
நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு
சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், “நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)
சுவர்க்க வாயில்கள்
நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; ‘ஆம்’ அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)
“நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சுவர்க்கவாசிகளின் இதயங்கள்
பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.
“விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்” என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி
சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை
அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; ‘ஸலாமுன்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை ‘ஸலாமுன்’ என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10
சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்
அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15
சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.
அப்துஸ்ஸமது மதனி