இலுப்பூர் என்ற ஊரில் ராமன், சோமன் என்று இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் ஓரளவு படித்திருந்த போதிலும், எவ்வித உத்தியோகமும் கிடைக்காமல், தம் ஊரில் ஏதேதோ வேலைகளைச் செய்து பிழைத்து வந்தனர்.
ராமன் தனக்குக் கிடைக்கும் வருமானம் போதாமல் போனதால் கோபம் கொண்டு அந்தக் கோபத்தைத் தன் மனைவி, மக்கள் மீது காட்டி வந்தான். சோமனோ தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கை நடத்தி வந்தான்.