அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
தர்கா வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்கா வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 14, 2014

இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் (தொடர்ச்சி )




இஸ்லாம் சத்திய மார்க்கம் நாம் சத்தியத்தில் இருக்கிறோம் . இந்த இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள் , சடங்கு , சம்பிரதாயம்  இவைகளுக்கு இடம் இல்லை.

இஸ்லாத்தில்முழுமையாக நுழைவோம்

இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் !

அல்லாஹ்வின் திருபெயரால் ...

''இறை நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் . ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் ! அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி {எதிரி }யாவான் ."
அல்குர் ஆன் [2.208}

செவ்வாய், டிசம்பர் 24, 2013

திருந்தாத சில ஜென்மங்கள்




கந்தூரி
மூடநம்பிக்கை
ஆனாச்சாரம்
விழாக்கள்
அறியாமை
இன்னும் பல கூத்துக்கள்  நடந்துகொண்டு தான் இருக்கிறது.

புதன், அக்டோபர் 23, 2013

தர்கா வழிபாடு

 தர்கா வழிபாடு
இஸ்லாத்தின் அடிப்படை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும்மில்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும் .இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிம் அல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர் .

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர் .
"வணக்கத்திற்குரியவன்  அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை " என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன .
1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.
2. அல்லாஹ்வை தவிர எவரையும் வணங்க கூடாது.
இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாக உள்ளனர் .இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கி கொண்டு  இன்னொரு பக்கம் இறந்தவர்களையும் , அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும் மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர் .

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும் .இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள் .

அல்லாஹ்வை வணங்குகள் என்று சொல்லித் தருவர்தர்க்காகவோ அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதர்க்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பபடவில்லை ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் . அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை .

அல்லாஹ்வை தவிர எவரையும் எதனையும் வணங்க கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது .

இது கற்பனை அல்ல , தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்....