அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நிதானம் எனும் அழகிய பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதானம் எனும் அழகிய பண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 25, 2015

நிதானம் எனும் அழகிய பண்பு

நிதானம் வேண்டும்!

தானம் கொடுக்க வேண்டும்!
நாணம் இருக்க வேண்டும்!
அல்லாஹ்வின் திருபெயரால் ..........
தானத்திலே சிறந்து நிதானம் என்று பழமொழி கூறுவார்கள்!
மாலை நேரம். அலுவலகத்திலிருந்து களைத்துப்போய் வீடு திரும்புகிறீர்கள். சிடுமூஞ்சி மேலாளருடனும், முடிவு இல்லாத கோப்புகளுடன் மல்லுகட்டிவிட்டு எரிச்சலுடன் வருகிறீர்கள்.

உங்கள் அன்பு மனைவி முகம் கழுவி, தலைவாரி, பளிச்சென்று உடை உடுத்தி , புன்னகை தவழும் முகத்துடன் உங்களை அன்போடு வரவேற்று, உங்கள் களைப்பு தீர காப்பியும், சிற்றுண்டியும் பரிமாறுவாள் என்ற எதிர்பார்ப்புடன் வருகிறீர்கள்.

ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததுமே உங்கள் எரிச்சல் இன்னும் பல மடங்காய் எகிறுகிறது. வீடு முழுக்க ஒரே குப்பை! துணிமணிகள் எல்லாம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. தலைமுடி களைந்து, ஓர் அழுக்குப் புடவையுடன், வேர்க்க விருவிருக்க உங்கள் மனைவி சமையல் அறையில் எதோ வேலையாக இருக்கிறார். குழந்தை ஒருபக்கம் அழுத கொண்டிருக்கிறது. எதுவுமே ஒழுங்கில்லை.