அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 16, 2016

நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் !

நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் !

 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் "நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நூல்.முஸ்லிம்]
சில மக்கள்கள் இருக்கிறார்கள் , அவர்கள் இன்னும் அறியாமையினால் செய்துக் கொண்டுதான் வருகிறார்கள் .  இறைநேசர்களின் பெயரால் , இன்ன இன்ன அவுலியாக்கள் பெயரினால் விளங்காத சில மக்கள்கள் நேர்ச்சைச் செய்து வருகிறார்கள். நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் , அந்த இபாதத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் நாம் செய்ய வேண்டும். மற்றவர்களின் பெயரால் செய்துவது கூடாது. சில சுன்னத்துவாதிகள் இதற்கு  விளக்கம் கொடுப்பார்கள் , அது விளக்கம் அல்ல மாறாக அது ஒரு குழப்பம் . மக்கள்கள் மார்க்கத்தை முறையாக அறிந்துக் கொண்டால் இந்த பிரச்சனைகள் வராது ! மார்க்க அறிவு இல்லாததனால் நம்மை சிலர் குழப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.