அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பிறர் மானம் காப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறர் மானம் காப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 18, 2015

கோள் சொல்லுதல்

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வோம்!
தீமைகளை விட்டு விலகி இருப்போம்!
நன்மை செய்வோம்! பிறர் நன்மை செய்ய நாம் தூண்டுவோம்!
பிறர் தீமைச் செய்வதை தடுப்போம்! சிறந்த முஸ்லிமாக வாழ்வோம்!
அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவோம்!
இன்ஷாஅல்லாஹ் சுவனத்தில் நுழைவோம்!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........
அல்லாஹ் நமக்கு ஒரு அழகான மார்க்கத்தைத் தந்துள்ளான். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகான வழிமுறைகள் இருக்கிறது. புதிதாதக இஸ்லாத்தைத் தழுவியவர்கள் , அவர்கள் அல்லாஹ்வின்பால் நெருங்கிக் கொண்டு செல்கிறார்கள். பிறப்பினால் முஸ்லிமாகிய நாம் இன்னும் பின்தங்கிதான் இருக்கிறோம். வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டும், மற்றவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டும், மார்க்கத்தில் இல்லாத நூதனமான காரியத்தில் ஈடுப்பட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துக் கொண்டும் , வீண் விவாதங்களில் ஈடுப்பட்டுக் கொண்டும் நாம் வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கிறோம்.

திங்கள், ஏப்ரல் 14, 2014

பிறரை இழிவாக எண்ணாதீர்கள்

பிறரை இழிவாக எண்ணாதீர்கள் /மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்)
இஸ்லாத்தின் பார்வையில் பாவங்களுக்கு இரண்டு விதமான தண்டனையை நாம் காணலாம். ஒரு விதமான பாவத்தை பொறுத்தவரை திருடினால் பாவம். அதற்குத் தண்டனை இந்த உலகில் கை வெட்டப்படுதல். திருமணம் முடித்து விபச்சாரம் செய்வது பாவம். அதற்குத் தண்டனை இவ்வுலகில் கல்லெறிந்து கொல்லப்படுதல். மேலும் திருமணம் முடிக்காமல் விபச்சாரம் செய்வது பாவம். அதற்கு நூறு சாட்டையடி. மேலும் அவதூறு சொல்வது பாவம். அதற்கு சாட்டையடி. இப்படி உலகிலேயே பாவத்திற்கான பரிகாரத்தை இஸ்லாம் காட்டியுள்ளது.

சனி, நவம்பர் 02, 2013

பிறர் மானம் காப்போம்

பிறர் மானம் காப்போம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)
மானத்தின் முக்கியத்துவம்
மனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்’ என்பார்கள் நம் முன்னோர்கள்.
மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.
ஆதி மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன. உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.
”அவர்களிருவரும் அம்மரத்தினை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்கு தெரிந்தன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்.” (அல்குர்ஆன்: 7:22)