அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம்
நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம்.
நிறைவான வாழ்வு.
அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு
என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி
இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள உயர்வும்
இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது" என்றார்.
பொதுவாக நாம் அனைவரும் என் நண்பரைப் போல் நமக்கும் மற்றவருக்கும் இடையே
வருமானத்தை வைத்தும் செல்வத்தை வைத்தும் நம் வாழ்க்கையையும் நமக்கு
இறைவன் செய்துள்ள நன்மைகளையும் எடை போடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான்
அதிகமாக சம்பாதிப்பவர்களை மற்றும் செல்வந்தர்களைப் பார்த்து
பொறாமைப்படுகிறோம்