அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.....
அல்லாஹ் கிருபையாளவன் , கருணையாளவன் பாவங்களை மன்னிக்கக் கூடியவன்.
உங்கள் பாவங்களுக்கும் இன்றே பாவமன்னிப்புக் கோருங்கள்! அதை தள்ளிப் போடாதீர்கள்! யார் நம் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும்?
உங்களின் வாழ்வைப் பற்றி நீங்கள் எண்ணிப் பாருங்கள்! உங்கள் வாழ்வில் பெரும் பகுதி சென்று விட்டது. மீதி இருப்பது சிறிது நாட்கள். இப்போது என்ன செய்யப் போகின்றீர்கள்? சென்ற காலத்தைப் போல எதிர்காலத்தையும் வீணிலே கழிக்கப் போகின்றீர்களா? உங்களின் கழிந்து போன வாழ்வு எவ்வளவு அதிகமாக இருந்தது . நீங்கள் ஒருகாலத்தில் மழலை மொழி பேசித் தரையில் தவழந்து விளையாடினீர்கள்! அது ஒருகாலம் ! கடந்த காலம் என்றைக்குமே மீண்டும் திரும்ப போவதில்லை. சென்றுபோன அவ்வளவு நீண்ட நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விட்டது. கிழிந்து போன சீலை ஒன்று ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் உங்கள் வாழ்க்கை மிக குறுகிய தவணையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நூலிழை என்றைக்கு அறுந்து விழுமோ! யாருக்குத் தெரியும்.