வெறும் வயிறு மட்டும் காலியாக வைத்திருப்பது நோன்பு பிடிப்பது அல்ல! மாறாக ஒவ்வொரு உறுப்புகளும் அல்லாஹ்வுக்கு பயந்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நாம் எல்லோரும் இன்ஷாஅல்லாஹ் நோன்பு பிடிப்போம்! |
மற்ற மாதங்களிலேயே சிலர் தொழாமல் இருப்பார்கள் . ரமலான் வந்துவிட்டால் பள்ளிக்கு வந்து ஜாமாத்துடன் சேர்ந்து ஐவேளை தொழுவார்கள் ! மற்ற மாதங்களிலேயே சதக்க கொடுக்கமாட்டார்கள் சிலர். அந்த ரமலான் மாதத்தில் அதிக அதிகம் சதக்காச் செய்வார்கள். மற்ற மாதங்களிலேயே குர்ஆன் ஓதமாட்டார்கள் . அந்த மாதத்தில் அதிகமாக குரானை ஓதுவார்கள். மற்ற மாதங்களிலேயே அதிகமானவர்கள் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ரமலான் மாதம் வந்துவிட்டால் . அந்த ஒருமாதத்துக்கு மட்டும் ஓயிவு கொடுத்துவிடுவார்கள் அந்த டிவி க்கு [அந்த புனிதமான மாதத்திலும் டிவி பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் , நோன்பை வைத்துகொண்டு , நேரத்தை கழிக்கவேண்டும் என்பதற்காக . அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவேண்டும்.] இந்த ஒரு மாதம் மற்ற 11 மாதங்களுக்கு பயிற்சிதான் இந்த ரமலான் மாதம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டால் ''அல்ஹம்துலில்லாஹ்!''.]