அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
மார்க்க கல்வி அவசியம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்க கல்வி அவசியம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

மார்க்க கல்வி அவசியம்!


மார்க்க ஞானம் இல்லாத காரணத்தினால் புது புது நூதன காரியத்தில் ஈடுபாடு அதிகம் உள்ளவர்கள் பெண்கள்தான் , மூடநம்பிக்கை , சடங்கு , சம்ப்ரதாயம் , சகுனம் பார்ப்பது, நேரம் காலம் பார்ப்பது இவைகள் அனைத்தும் செய்வது பெரும்பாலும் பெண்கள்தான் ! இஸ்லாத்தில் இல்லாத புது புது அனாச்சாரம் அரங்கேற்றம் செய்வது பெண்கள்தான் என்பது எதார்த்த உண்மை! இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அவசியம் மார்க்க கல்வி கற்க வேண்டும் ! குறை சொல்லும் நோக்கம் இல்லை , தவற்களை சுட்டி காட்டி சீர்திர்த்தம் செய்து கொள்ளும் நோக்கத்தில் என் கருத்தை கூறினேன் .

ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)