அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
முத்தான முத்துக்கள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தான முத்துக்கள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 19, 2013

முத்தான முத்துக்கள் !



தூய்மை ஈமானின் ஒரு பகுதி என ரசூல் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவன் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவான்  . ஆதாரம்: திர்மிதி
ஸலாம் கூறுவதில் முந்துபவன் பெருமையை விட்டும் நீங்கியவனாவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்    .ஆதாரம் பைஹகி
மிஸ்வாக்கு செய்வது வாயை சுத்தமாகுவதாகும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுத் தருவதாகவும் உள்ளது என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்:அஹ்மத் ,புகாரி
புறம் பேசுவது விபச்சாரத்தை விடக் கடுமையான பாவமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்: பைஹகீ
குர் ஆன் (அதன்படி நீ நடந்தால் அது ) உனக்கு சாதகமாகும் அல்லது (அதன்படி நடக்காவிட்டால் அது உனக்கு ) பாதகமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
பாவத்திலிருந்து தவ்பா செய்யக்கூடியவன் . பாவமே இல்லாதவனைப் போன்று ஆகிவிடுகிறான் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம் : இப்னு மாஜா .
எவன் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு மரணத்திருக்கு பின் வரவிருக்கும் வாழ்க்கைக்காக அமல் செய்கிறானோ அவனே புத்திசாலி ஆவான் . தன்னைத் தன் மனத்தின் தகாத இச்சைகளின் பின்னே அலைய விட்டுவிட்டு அல்லாஹ்விடம் தவறான நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பவன் முட்டாள் ஆவான் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம் : திர்மிதி.
இன்ஷாஅல்லாஹ் தொடரும் ....