அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 15, 2014

அல்லாஹ்வின்திருப்பொருத்தமே குறி

அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

நன்மையின்  வாசல் திறந்து இருக்கு . ஆனால் நமக்குதான் உள்ளே நுழைய இன்னும் நேரம் கிட்டவில்லை. சந்தர்ப்பம் கிட்டும்போது நல்ல விஷயங்களை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் அவைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

முகஸ்துதிக்காக வணங்குவது




அல்லாஹ்வின் திருபெயரால் இந்த கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்:
உள்ள தூய்மையுடன் அல்லாஹ்வை வணங்க அல்லாஹ் நமக்கு கிருபைச் செய்வானாக .
நல்அமல்கள்  இறை திருப்தியை நாடி மனத் தூய்மையுடன் செய்யப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் முகஸ்துதிக்காக வணங்குவது 'சிறிய ஷிர்க் ' ஆகும். அந்த நற் செயல் பயனற்றதாகிவிடும் . இது நயவஞ்சகர்களின்  தன்மை என அல்லாஹ் கூறுகிறான்.

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

சிலைகள் வேறு ! சமாதிகள் வேறு!




இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காஃபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகலைத் தான் ; மகான்களை அல்ல என்று சிலருக்கு சந்தேகம் எழலாம் . இது அப்படியில்லாத சந்தேகமாகும் .

வெள்ளி, ஜூன் 28, 2013

வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!

வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே!


(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)


அல்லாஹ்வையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன்: 17:23)


அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதில் கஞ்சத்தனம் கூடவே கூடாது!

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான். பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன்: 47:38)

அல்லாஹ்வை வணங்குவதில் ஏற்படும் கஷ்டங்களை சகித்து பொறுமையுடன் இருத்தல்!

அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும், பூமியையும் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 35:1)

பிரார்த்தனை என்பது அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே!

நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்" (என்று இப்றாஹீம் சொன்னார்). (அல்குர்ஆன்: 19:48)

பெருமை பொருந்திய இறுதி இறை வேதம்!

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 85:21-)

மன்னிப்பே இல்லாத இணைவைப்பு எனும் பெரும்பாவம்!

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48).