விதியின் மீது நம்பிக்கை விதியின் மீது நம்பிக்கை ....... அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''உங்களில் ஒவ்வொருவரின் சொர்க்கமும் நரகமும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன.'' மக்கள் வினவினார்கள்.. ''அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை நம்பிக்கைக்கொண்டு செயல்படுவதை விட்டுவிடலாமல்லவா?''
அண்ணலார் .. ''இல்லை ! செயல்படுங்கள்! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதற்காக படைக்கப்பட்டுள்ளானோ அதற்கான தவ்ஃபீக் [இறைவன் அருளும் பேரு ] அளிக்கப்படுகிறது. எவன் பாக்கியவானோ அவனுக்குச் சுவனத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் இறையுதவி அளிக்கப்படுகிறது. மேலும், எவன் துர்பாக்கியவானோ [நரகவாசியோ] அவனுக்கு நரகத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் பேரு அளிக்கப்படுகிறது.