செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது, இறைவனுக்கு செய்யும் விஷயத்தில் தவறிழைத்துவிட்டால் இறைவனிடத்தில் தம் தவறுகளை தனிமையில் அமர்ந்து வெட்கப்படாமல் சொல்லி மனமுருகி மன்னிப்புத் தேடுவது கூடும். சமுதாயத் தலைவர்களாகவோ அல்லது அரசியல் தலைவர்களாகவோ அல்லது பிரமுகர்களாகவோ அல்லது இயக்கமோ அல்லது பொதுவாழ்வில் ஈடுபடுகிற எதுவோ, எவருமோ செய்த தவறை, மக்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது பயந்துகொண்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ மறைப்பது எந்த விதத்திலும் கூடாது.
நமது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமான பாபரி மஸ்ஜிதை இந்துத்துவ பாசிச வெறியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கி இந்தியாவின் இறையாண்மையையும் கட்டுக்கோப்பையும் தகர்த்தெறிந்தனர். அப்போதிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர், நரசிம்மராவ் சிறுபான்மை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதை யாரும் மறந்திருக்கமாட்டோம். மன்னிப்பு மட்டும் கேட்காமல் இடித்த இடத்திலேயே கட்டித் தருவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை நிறைவேற்றவே இல்லை. இருந்தாலும் வெட்கப்படாமல் அல்லது ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்காவது மன்னிப்புக் கேட்டதை தலைப்புக்கான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.