பிணத்தின் மாமிசத்தை தின்பவர்கள் (புறம்/குறை . part6 )


 பிணத்தின் மாமிசத்தை தின்பவர்கள் (புறம்/குறை . part6 )

اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ وَاتَّقُوا اللّٰهَ‌


உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்.


அதாவது அந்தப் பிணத்தை தின்பதை எப்படி இயல்பிலேயே நாம் விருப்பமும் அது போன்று புறம் பேசுவதை மார்க்கத்தின் அடிப்படையில் வெறுத்திட வேண்டும் என்றால் புறம் பேசுவதற்கான தண்டனை இதை விடக் கடுமையானதாக இருக்கும்.


நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதா வில் குறிப்பிட்டார்கள் உங்களது இந்த நகரத்தில் புனிதமான இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்கு புனிதமானதோ அதே அளவுக்கு நிச்சயமாக உங்கள் உயிர்களும் உடைமைகளும் உங்களின் மானமும் உங்களுக்கு புனிதமானவை.


அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்


நூல்: ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீஹ் புகாரி, திர்மிதீ 2085, இப்னுமாஜா,முஸ்னத் அஹ்மத்,தாரமீ.



ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் பொருள் மானம் உயிர் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும் ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவது அவரின் தீமைக்கு போதுமான சான்றாகும்.


அறிவிப்பாளர் அபூஹுரைரா ரலி அவர்கள் 

ஸஹீஹ் முஸ்லிம் 5010, திர்மிதீ 1859.


மற்றொரு ஹதீஸில் பராஉ பின் ஆசிப் ரலி அவர்கள் கூறுகிறார்கள்


ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் அப்போதுதான் வீடுகளுக்குள் இருக்கும் கன்னிப் பெண்களுக்கும் கேட்கும் வகையில் உரத்த குரலில் சொன்னார்கள்.


நம் நாவல் மட்டுமே இறை நம்பிக்கை கொண்ட சமுதாயம் நீங்கள் முஸ்லிம்கள் தொடர்பாக புறம் பேசாதீர்கள் அவர்களின் அந்தரங்களை துருவி ஆராயாதீர்கள் சகோதரனின் அந்தரங்கத்தை துருவி ஆராய்வானோ அவனது அந்தரங்கத்தை அல்லாஹ் துருவி ஆராய்வான்.


யாருடைய அந்தரங்கத்தை அல்லாஹ் ஒரு ஆரம்பித்து விட்டாலும் அப்போது அவர் வீட்டுக்குள்ளே மறைந்து இருந்தாலும் அவரை அல்லாஹ் கேவலப்படுத்திய தீருவான்.


நூல் : ஷுஅபுல் ஈமான் பைஹகி, முஸ்னத் அர்ரவ்யானீ, முஸ்னத் அபீயஃலா,



குறை பேசுபவனின் தண்டனை

இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நான் விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு சமூகத்தாரை கடந்து சென்றேன் அங்கே செம்பால் ஆன அவர்களது நகங்களை கொண்டு முகங்களையும் நெஞ்சங்களையும் கீறிக் கொண்டு இருந்தார்கள்.


யார் இவர்கள் இன்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் கேட்டேன் .


இவர்கள் தான் மனிதர்களின் சதைகளை தின்னும் புறம் பேசியவர்கள் மற்றவர்களின் மானங்களில் தலையிட்டு கொண்டும் இருந்தவர்கள் என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) அவர்கள் 

நூல் அபூதாவூத், அஹ்மத்.


மற்றொரு ஹதீஸில் அபூ ஸயீத் அல் குத்ரி ரலி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் விண்ணுலக பயணத்தின் போது அல்லாஹ் ஒரு சமூகத்தின் பக்கத்தில் அழைத்துச் சென்றார் அங்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் இருந்தார்கள் அவர்கள் விஷயத்தில் சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.


அந்தப் பொறுப்பாளர்கள் ஒருவருடைய விழா பகுதியின் பக்கம் வந்து செருப்பின் அளவிற்கு ஒரு சதைத் துண்டை வெட்டி எடுத்தார் பிறகு அவர்களில் ஒருவருடைய வாயில் சாப்பிடு என்றுநீ ஏற்கனவே சாப்பிட்ட தைப் போன்று இதையும் சாப்பிடு என்று வற்புறுத்துவார் இதனால் அவர் மரண வலியை உணர்வார்.


இவர்கள் குறித்து நபியவர்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள் இவர்கள்தான் இழித்தும் ,பழித்தும் ,புறம் பேசி ,கோள் சொல்லி திரிந்தவர்கள்.


(தப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்)


எனவே தான் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது ஒருவர் இறந்து போன தன் சகோதரனின் உடலை சதையை தின்ன விரும்புவாரா அதை நீங்கள் வெறுப்பீர்கள் அல்லவா என்று.

தொடரும்...

கருத்துகள்