அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
''மறுமைக்காலம் நெருங்கி விடின் இறை நம்பிக்கையாளரின் கனவு பொய்யாக மாட்டாது. இறை நம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தில் 46 பாகங்களில் ஒரு பாகமாகும்' என்று அண்ணல் நபி [ஸல்[ அவர்கள் நவின்றனர்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்[
''நல்ல கனவுகள் இறைவன் பாலிருந்து ஏற்படுகின்றன . தீய கனவுகள் ஷைத்தானைக் கொண்டு ஏற்படுகின்றன . எனவே உங்களில் எவரும் தீக்கனவு கண்டு அதன் காரணமாகத் திடுக்கிட்டு எழுந்திருப்பின் அவன் தம் இடப்பக்கம் [எச்சில்] துப்பிவிட்டு இறைவனிடம் அதன் தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடினால், அது அவருக்கு யாதொரு தீங்கும் நல்காது என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்]
''உண்மையான கனவு சஹர் [வைகறைக்குச் சற்று முன்னுள்ள] நேரத்தில் காண்பதாகும் ' என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஜைத்தூன் எண்ணை யைக் காணுதல் *
சிறப்பிலும், மேன்மையிலும் உமது காலம் கழியும்.
ஷைத்தானை வழிபடுதல் *
எதிர்பாராத வகையில் உமக்குப் பொருள் கிடைக்கும் மார்க்கக் கல்வி பெருகும் . உம் எதிரி தோல்வியையே தழுவான் .
ஜக்காத் கொடுக்கக் காணுதல் *
நீர் செய்யும் வர்த்தகம் அல்லது தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
ஜம்ஜம் தண்ணீர் பருகக் காணுதல்*
ஞானமும் பெருந்தன்மையும் அந்தஸ்த்தும் உயர்வதற்கு அறிகுறி இது.
ஜீவித்துக் கொண்டிருப்பவன் கப்ருக்குள் இருப்பதை காணுதல்*
சிறிது சங்கடமும், மனச் சோர்வும் ஏற்படக்கூடும் . மனந்தளர வேண்டாம். இறைவனை வழிபட்டு மீட்சித் தேடுங்கள்.
ஹரம் ஷரீபில் போகக் காணுதல்*
உம்மைப் பீடித்துக் கொண்டுள்ள அச்சமும் , கவலையும் விலகி சந்தோஷமும் , மன அமைதியும் ஏற்படும்.
ஹஜரெ அஸ்வதை முத்தமிடக் காணுதல்*
உமக்கு ஒரு மார்க்க பக்தி நிறைந்த பெரியாரின் அனுகிரகம் உண்டாகும்.
ஹஜ்ஜூ செய்யக் காணுதல்*
மன நோக்கமும் உள்ளக் கிடக்கையும் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பதற்கான அறிகுறி.
வெள்ளை முடியைக் காணுதல்*
உமது கண்ணியமும் மதிப்பும் உயரும்,, அறிஞ்ராவீர் .
வெள்ளை யானை*
நல்ல குணமும் நேர்மையுள்ளமும் கொண்ட ஒரு குமாரன் பிறப்பான். உமது நோக்கத்திற்கேற்ப செல்வம் பெருகும்.
வேட்டையாடல்*
உம்முடைய நோக்கமும் நிறைவேறும் அல்லது நற்குணமும் பண்பும் வாய்ந்த மனைவி கிடைப்பாள் .
வேட்டையாடக் காணல் *
செல்வமும் பெருந்தன்மையும் உமக்கு ஏற்படுவதற்கான அறிகுறி இது.
வேளாண்மை செய்வதைக் காணுதல் *
மார்க்கப் பணியில் ஈடுபடுவீர்கள். தேகசுகம் அபிவிருத்தியடையும்.
வைரம்*
இல்லத்தில் பல்வேறு வகையான நன்மைகள் உமக்கு ஏற்படும்.
வெந்நீர் குடித்தல்*
சுகம் குறையும் வியாதி அதிகரிப்பும் உமக்கு ஏற்படுவதற்கான அறிகுறி இது.
வெள்ளப் பெருக்கு *
தாராளத் தன்மையும் ஈகைக் குணமும் உமக்கு ஏற்படும்.
வெள்ளி கிடைத்தல் *
உம்மைப் பீடித்துக் கொண்டிருக்கும் துக்கமும் கவலையும் விலகும். சந்தோசம் உண்டாகும்.
வெள்ளியைக் காணுதல் *
செல்வம் பெருகி உமது இல்லம் செழிப்படையும் .
வெள்ளியைக் கொடுத்தல் *
யாரோ ஒரு பெண்ணினால் நீர் ஏமாற்றப்பட்டு, அதனால் ஓரளவு நஷ்டம் அடைவீர்.
விறகு எரிக்கக் காணுதல் *
நயவஞ்சகத் தன்மை ஏற்படும், இலேசாக கலக்கமும் உண்டாகும்.
வெட்டப்பட்ட கிளை *
நற்கிரியைகளிலும் , நல்லெண்ண நற்செயல்களிலும் உம்முடைய காலம் கழியும்.
வெட்டப்பட்ட கிளையில் ஏறுதல் *
நீர் எங்கோ பிரயாணம் செய்ய நேரிடும் என்பதற்கான அறிகுறி இது.
விவசாயம் *
எதிர்பாராத பொருள் வந்தடையும்.
விவாகம் *
கனவில் கண்ட மணப்பெண்ணின் அழகுக்கு ஏற்ப உமக்குச் செல்வமும் சந்தோஷமும் கிட்டும்.
விவாகத்தைக் காணுதல் *
செல்வம் அதிகரித்து சிறப்புப் பெறுவீர். இது காரும் உம்மைப் பீடித்துள்ள வறுமை ஒழிந்துவிடும் .
விவாக ஊர்வலம் *
இந்தக் கனவைக் காணும் நீர் பெண்ணாயிருப்பின் உமக்குச் சந்தோசம் மேற்படும்,, ஆணாயிருப்பினும் துக்கத்தில் தவிக்க நேரிடும்.
விளக்கின் ஒளி *
சந்தோஷம் அதிகரிக்கும் , அத்துடன் உம் ஆயுளும் வளர்ச்சியடையும்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...........................
அல்லாஹ் மிக அறிந்தவன்
My dream about walking on a home steps which is unknown to me and at last reached the end where there is wall. Need to know meaning of this dream. I'm seeing this dream very often.
பதிலளிநீக்குKilindha aadaigal. Matrum puyal veesudhal
பதிலளிநீக்குகடற்குதிரையை கண்டால்
பதிலளிநீக்கு