நன்மை தேடுபவரே, முன் வா! தீமையை நாடுபவனே, நிறுத்து!'



 நன்மை தேடுபவரே, முன் வா! தீமையை நாடுபவனே, நிறுத்து!'


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழான் மாதத்தின் முதல் இரவாக இருக்கும் போது, ​​ஷைத்தான்களும், கலகக்கார ஜின்களும் கட்டிப் போடப்படுகின்றனர். நரகத்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளன, அதன் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை. சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, அதன் கதவுகள் எதுவும் மூடப்படவில்லை. ஒரு அழைப்பாளர் அழைக்கிறார்: 'ஓ நன்மை தேடுபவரே, முன்வாருங்கள்! தீமையை நாடுபவனே, நிறுத்து!' நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் அடிமைகளை நரக நெருப்பிலிருந்து விடுவிக்கின்றான்” (திர்மிதி).


புனிதமான மாதத்தில் நாம் நுழையும் போது, ​​நமது அன்பிற்குரிய நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் நாமும் பிரார்த்திப்போம்:

இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி நெருங்கிகொண்டுயிருக்கிறது. அந்த ஒருமாதம் நாம் எல்லோரும் மனஉறுதியுடன் சமூக ஊடகங்களில் இருந்து விலகி , அல்லாஹ்வுக்காக ஒருமாதம் காலம் இருப்பதற்கு நாம் அனைவரையும் முயற்சி எடுப்போம். இந்த விடயத்தில் நாம் எல்லோரும் உறுதியாக இருப்போம்! 

நாம் அந்த புனித மாதம் ரமலான் முழுவதும் அல்லாஹ்வின் இணைப்பில் இருப்போம். மற்ற விடயத்தில் இருந்து துண்டிப்போம் . இதுதான் பணிவான வேண்டுகோள்! 

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!!! ஆமீன்...

கருத்துகள்