Post Page Advertisement [Top]

 




வெற்றிகரமான கணவர்


மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் நல்ல மனைவியின் நேசத்திற்குரியவராகவும் திகழமுடியும் இஸ்லாமின் நேரிய வழிகாட்டுதலின் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்துகொள்வார். நற்குணங்களால் காரணமாக ம பின்னப்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் கண்ணோட்டத்தைக் மனைவியிடம் கொண்டிருப்பார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறைவேற்றுவதில் தனது முழு ஆற்றலையையும் வெளிப்படுத்துவார். இதற்கிடையில் பெண் கோணலான எலும்பினால் படைக்கப்பட்டவள். அவளை முழுமையாக சீர்படுத்துவது அறவே சாத்தியமற்றது என்பதையும் மறந்துவிடமாட்டார்.


மனைவியிடம் விவேகத்துடன் நடந்து கொள்வார்


உண்மை முஸ்லிம், மனைவியிடம் அறிவுப்பூர்வமாகவும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவளது குடும்பத்தார் எவரையும் அவளுக்கு முன் தவறாகப் பேசக்கூடாது. அவளது உறவினர்பற்றி அவளது இதயத்தைக் காயப்படுத்தும்படியான எந்த வார்த்தையையும் பேசிடக்கூடாது என்பதில் கணவன் கவனமாக இருக்கவேண்டும். அம்மனைவியும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்கு நோவினைதரும் எந்தக் காரியத்தையும் செய்துவிடாமல், அவரது



குடும்பத்தாருக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்து விடாமல் நடந்துகொள்ள வேண்டும்.


கணவர் தன்னிடம் மனைவி வெளிப்படுத்திய ரகசியங்கள் எதையும் பகிரங்கப்படுத்தக் கூடாது. இதில் ஏற்படும் கவனக்குறைவும் அலட்சியமும் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சனைகளின் எரிமலையை வெடிக்கச்செய்து அவர்களிடையே நிலவும் அன்பொளியை அணைத்துவிடுகிறது. புத்திசாலியான முஸ்லிம் இவ்வாறான சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். எல்லா நிலையிலும் இஸ்லாமின் தூய ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும்.


மனைவியின் குறைகளை சீராக்குவார்


மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது மனைவியின் கல்வியறிவிலோ நடத்தையிலோ ஏதேனும் குறைகளைக் கண்டால் அவளிடம் அறிவார்ந்த முறையில் மென்மையாக நடந்து, அவளது குறைகளைக் களைந்து, அவளைப் செம்மைப்படுத்துவதில் ஆர்வம் கொள்ளவேண்டும். அவளைப் பண்படுத்தும் முயற்சியில் அவளிடம் ஆர்வக்குறைவோ வெறுப்போ வெளிப்பட்டால் அதை மென்மையாகவும் புத்திக் கூர்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.


எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு மத்தியில் அவளைக் கண்டிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணை கடுமையாகப் பாதிக்கும் விஷயம் என்னவெனில், அவளைத் தண்டிப்பதை பிறர் பார்ப்பதும், அவளைக் கண்டிப்பதை பிறர் கேட்பதும்தான். இறையச்சமுள்ள முஸ்லிம் பிற மனிதர்களைவிட உணர்வால் மிக நுட்பமானவர். அவ்வாறே மற்றவர்களின் உணர்வுகளையும் மிக அதிகமாக மதிப்பார்.


பெற்றோர், மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்


நற்பண்புள்ள முஸ்லிம் தனது பெற்றோர் மற்றும் மனைவியிடையே சமநிலைப் பேணுவதை நன்கறிவார். இருவரில் எவருக்கும் அநீதி இழைத்துவிடாமல், அவ்விருவருடனான உறவில் சமநிலை பேணி. பெற்றோருக்கு நோவினையளிக்காமலும், மனைவிக்கு அநீதியிழைத்து விடாமலும் விவேகத்துடன் நடந்து கொள்வார்.


பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து, உபகாரம் புரிந்து அவர்களது கடமையை நிறைவேற்றுவார். அவ்வாறே மனைவியின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். பெற்றோருக்கு உபகாரம் செய்வதாலும் அவர்களைப் பேணுவதாலும் மனைவியை புறக்கணித்துவிடக்கூடாது.


முஸ்லிம் தனது மனைவியுடன்




அவர் உண்மை முஸ்லிம் இறையச்சமுடையவராக இருப்பதால் இவ்வாறு சமநிலை மேற்கொள்வதில் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. மேலும் இஸ்லாமின் மேன்மையான நற்பண்புகளைக் கொண்டிருப்பார். அவரது மார்க்கம் பெற்றோர், மனைவியிடையே எவ்வாறு நீதமாக நடந்து அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய சரியான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்பதை அவருக்குப் போதித்துள்ளது. எனவே அதைப் பேணி நடப்பார்.


மனைவியை செம்மையாக நிர்வகிப்பார்


இவ்வாறான உயரிய பண்புகள் மற்றும் நல்லுறவின் மூலம் முஸ்லிம், மனைவியின் இதயத்தில் ஆட்சி செய்வார். அவளும் அவருக்குப் பணிந்து அவரது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்யமாட்டாள்.


முஸ்லிமான கணவருக்கு மார்க்கம் நற்பண்புகளை கற்றுக் கொடுத்து பல தகுதிகளையும் அளித்து, பல சட்டங்களையும் வகுத்துக் கொடுத்திருப்பதினால் அவரே பெண்ணை நிர்வகிப்பவராக இருக்கிறார்.


(ஆண், பெண், இரு பாலாரிஸ்) ஆண் பாலாரை (ப் பெண் பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன், (ஆண் பாலார்) தங்கள் பொருள்களைப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்... (அல்குர்ஆன் 4:34)


இந்த நிர்வகிக்கும் அதிகாரத்திற்கென சில கடமைகள் உள்ளன. கணவர் அந்தக் கடமைகள் குறித்து விசாரிக்கப்படுவார்.


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (வ்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே, நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் மனைவி தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள் அடிமை தன் எஜமான னின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவாள். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுண்கள்" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இவ்வாறு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியாக இருக்கிறார். ஒவ்வொருவரும் சமுதாயத்தைப் பற்றி ஏதேனும் ஒரு வகையில் விசாரிக்கப்படுவார். ஏனெனில் இஸ்லாமியப் பார்வையில் வாழ்க்கை என்பது உயர்வான அடிப்படையும், நற்செயலும் இணைந்த  ஆக்கப்பூர்வமான ஒன்றாகும். அது வீண்விளையாட்டும், பரிகாசத்திற் குரியதுமல்ல. மனித வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.


இஸ்லாம் பெண்ணுக்கு உயரிய அந்தஸ்து வழங்கியிருக்கும் அதே நேரத்தில் வாழ்வில் அவள் தனது பங்கை அறிந்து, மார்க்கம் அவளுக்கென ஏற்படுத்தியுள்ள வரம்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் சுட்டளையிடுகிறது. அப்போதுதான் அவள் சமூகத்தில் தனது கடமைகளை சிறப்பாக நிறைவு செய்வாள். அவள் குழந்தைகளின் பராமரிப்பில் கணவனுடன் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அழகும் கம்பீரமும் நிறைந்ததாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.


கணவன் மனைவியிடம் சிறந்த முறையில் நடக்க வேண்டுமென இஸ்லாம் விரும்பும் அதே நேரத்தில் பெண் அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட நேர்மையான விஷயங்களில் ஆணுக்குக் கட்டுப்பட வேண்டுமென மிக உறுதியான கட்டளையைப் பிறப்பிக்கிறது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் ஒருவரை ஒருவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமென ஏவுவதாக இருந்தால் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு மனைவியை ஏவியிருப்பேன்." (ஸுனனுத் திர்மிதி)


மேலும் கணவன் திருப்தி கொள்வதை மனைவி சுவனம் நுழைவதற்கான காரணமாக இஸ்லாம் அமைத்துள்ளது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "கணவன் தன் மீது திருப்தி கொண்ட நிலையில் மரணம் அடையும் பெண் சுவனம் நுழைவாள்."


(ஸுனன் இப்னு மாஜா)


கணவனுக்குக் கட்டுப்படாத பெண் மீது அவள் திருந்தி தனது கணவனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் வரை மலக்குகள் சாபமிடுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு பெண் தனது கணவனின் படுக்கையை வெறுத்த நிலையில் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கிறார்கள்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


ஆணுக்குப் பெண் மீது அதிகாரம் உள்ளது. கணவனுக்குக் கட்டுப் பட்டு அவனை திருப்திப்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் ரமழான் அல்லாத காலங்களில் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக்


கூடாது என்றும், அவனது அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும்


அனுமதிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

முன்மாதிரி முஸ்லீம் 👌 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib