🌐
Network Updates Explore community blogs
📡 Initializing network...

முஸ்லிம் தனது நஃப்ஸுடன்

 


முஸ்லிம் தனது நஃப்ஸுடன்

முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல் மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்துகொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்னு ஹன்ளலிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து தங்களது தோழர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்: "நீங்கள் உங்கள் சகோதரர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். உங்களது வாகனத்தின் சேணங்களை சரி செய்து, ஆடைகளை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மனிதர்களில் தனித்தன்மை கொண்டவர்களாக காட்சியளிக்க முடியும். நிச்சயமாக அல்லாஹ் அசிங்கமானதையும் அருவருப்பானதையும் நேசிப்பதில்லை." (ஸுனன் அபூதாவூத்) இங்கு நபி (ஸல் ) அவர்கள் பரிதாபத் தோற்றம், கிழிந்த ஆடைகள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிலையை இஸ்லாம்

வெறுக்கிறது.

உண்மை முஸ்லிம் இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். ஏனெனில், ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது.

உண்மை முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மாவுக்கு மத்தியில் சமத்துவத்தைப் பேண வேண்டும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். ஒன்றைவிட மற்றொன்றை உயர்த்தி விடக்கூடாது. இதுபற்றி நடுநிலையை வலியுறுத்திய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைக் காண்போம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனது அளவுக்கதிகமான வணக்கங்களைப்பற்றி அறிந்து. என்னிடம் "நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?" என்று கேட்டார்கள். நான் "ஆம் இறைத்தூதரே!" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள்; நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்தவேண்டிய கடமைகள் உள்ளன" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உண்பது, குடிப்பதில் நடுநிலையானவர்

முஸ்லிம் தனது உடல் நிலையை ஆரோக்கியமாக கொள்வதற்காக உண்பது, குடிப்பதில் நடுநிலையைப் பேணுவார், உணவை பேராசையுடன் அணுக மாட்டார், முற்றிலும் குறைக்க மாட்டார் அவரது முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கவேண்டும், அவரது வலிமையும் அளவுகோலாகும்.  வேண்டும்.  வைத்தும் ஆ

(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப் புலியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவழிக்காதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீஸ்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7.h

உண்பது, குடிப்பதில் நடுநிலையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் மிகக் கெட்டது அவனது வயிறாகும். சாப்பிடுவதாக இருந்தால் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியைக் குடிப்பதற்கும் மூன்றாவது பகுதியை மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்."  (சுனனுத் திர்மில்

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்; தொழுகையில் சோம்பலை ஏற்படுத்துகிறது.  தனது மனோஇச்சையைத் தேர்ந்தெடுத்தால் அழிந்து விடுவான்."

(அல் கன்றி

ளிடிஸ்லிம் போதைப் பொருட்களையும், செயற்கை உற்சாகத்தை அளிக்கும் மருந்துகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  குறிப்பான விரைவாக உறங்கி விரைவாக எழுந்திட வேண்டும்.  நோய்க் காலங்களில் முற்றிலும் தவிர்க்க மருந்து மட்டுமே சாப்பிட வேண்டும்.  அவரது வாழ்க்கை முறையே இயற்கையான உற்சாகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைய வேண்டும்.

கருத்துகள்