முஸ்லிம் பெண்மணிக்குரிய சட்டங்கள்


 முஸ்லிம் பெண்மணிக்குரிய சட்டங்கள்


‎‫كتاب المرأة المسلمة‬‎


இஸ்லாத்தில் பெண்கள் நிலை


இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்கள் குறித்து மற்ற சமூகத்தினரின் நிலைபாடு என்ன? அவர்களை எப்படி நடத்திக் கொண்டி ருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.


கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கெ ன எந்த உரிமையும் இருக்கவில்லை. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்ற னர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, செல்வத்தை நிர்வகித்தல் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன. அவர்களில் பிரபல தத்துவ ஞானி சாக்ரடீஸ் என்ப வன், "பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூலகாரணமாகும். மே லும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடு கின்றன" என்று கூறியுள்ளான்.


ரோமானியர்கள் பெண்களுக்கு "ஆன்மா" என்று எதுவுமில்லை என்று கருதிக் கொ ண்டிருந்தார்கள். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில் லை 'பெண்ணுக்கு ஆன்மா இல்லை" என்பது அவர்களின் கோசமாகிவிட்டிருந்தது. அதனால்தான் அவர்கள் மீது கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட் டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடு வார்கள்.


பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள் ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதை யுடன் மனைவியையும் எரித்துவிடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.


சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக் கூடி ய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவ தற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.


பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்து விட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் எல்லாப் பொருள்களையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் க ருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத் தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.


கிறிஸ்தவர்கள், பெண்களை ஷைத்தான் எனக் கருதுகிறார்கள். கிறுத்தவ மத அறி ஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: "நீங்கள் பெண்ணைக் கண்டால் அவ ளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அதுமட்டுமல்ல அவளை வனாந்தர ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்"


மேலும் கடந்த (19ஆம்) நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இது போ ன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் அவளுக்கு உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடாதென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென் றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்ப தால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.


பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மகாநாட்டைக் கூட்டினர். அதில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென தீர்மானம் போட்டனர். 1803ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நீர் ணயமும் செய்யப்பட்டது. (பெனி, ஷிலிங் penny, schilling என்பது ஆங்கிலேய நாணய த்தின் பெயர்கள்)


இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களின் கண்ணோட்டம் பெண்கள் இழிந்த பிற விகள் என்பதாக இருந்தது. அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்படமாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மட் டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் தம் பெண்மக்களை உயிருடன் புதைப்பவர்க ளாக இருந்துள்ளனர்.


இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும் நிச்சயமாக ஆண் களும் பெண்களும் சமமானவர்கள்தான் என விளக்கவும் இஸ்லாம் வந்தது.


ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போல் பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண் ணிலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொ ருட்டு உங்களைப் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்க ளில் எவர் மிக பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தாம் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்த றிபவன். (49:13) ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய் தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதமிழைக்கப்பட மாட்டார் கள். (4:124) மனிதன் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறு த்தியுள்ளோம்.(46:15)


நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: முஃமின்களில் பூரண ஈமானுடையவர்கள் அவர்க ளில் அழகிய குணமுடையவர்களே. தனது மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, மனிதர்களில் நான் அழகிய முறை யில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உன் னுடைய தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உன் தாய் என்றே கூறி

னார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உன் தந்தை எனக் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) இது பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும்.


பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்



நிச்சயமாக பெண்களுக்கு பொதுவான சில உரிமைகள் உள்ளன. அவற்றை அவர் கள் அவசியம தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அவர்கள் விரும்பும்போது பூர ணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. அவ்வுரிமை


கள் வருமாறு:


1-சொந்தமாக்கிக் கொள்ளல்: வீடுகள், விவசாய நிலங்கள், தொழிலகங்கள், தோட் டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவள் தாயாக மகளாக சகோ தரியாக எவ்வாறு இருப்பினும் சரி


2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவ னை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறி த்துக் கொள்வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்க ளுக்கு உறுதியாய் வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும்.


3- எவையெல்லாம் அவள் மீது கடமையோ அவையனைத்தையும் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங் களையும் அதை நிறைவேற்றும் முறையையும் அறிவது. இன்னும் அவள் நிறை வேற் றக் கடமைப்பட்ட உரிமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வண க்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந்துகொள். (47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் (இப்னுமாஜா) என நபி(ஸல்) அவர்களும் பொதுவா கவே சொல்லியிக்கிறார்கள்.


4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வ தற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் ஆகியோ ருக்கு தனது விருப்பப்படி வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வ தற்கும் உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று உரிமை பெறுகிறார்கள்.


5-விருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம் கணவனது விருப்பத்துடன், திருமணமான பெண்ணாக இருந்தால்! இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப் பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்க ளில் அவர்களுக்கு ஆறுதலும் ஒத்துழைப்பும் வழங்கிக் கொள்ளலாம். அல்லாஹ் வுக்காக என வாய்மையுடன் கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கிவிடுவதும் கூடும்.


6- மரணசாசனம்: அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவிதகாலத்தில் மர ண சாசனம் எழுதிக் கொள்வதற்கும் மரணத்திற்குப் பின்பு அதைச் செயல்படுத்தச் செய்யவும் அவளுக்கு உரிமை உண்டு. அது விஷயத்தில் யாரும் அவளை ஆட்சேப ணை செய்ய முடியாது! ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களைப் போல் பெண்கபெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்


நிச்சயமாக பெண்களுக்கு பொதுவான சில உரிமைகள் உள்ளன. அவற்றை அவர் கள் அவசியம தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அவர்கள் விரும்பும்போது பூர ணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. அவ்வுரிமை


கள் வருமாறு:


1-சொந்தமாக்கிக் கொள்ளல்: வீடுகள், விவசாய நிலங்கள், தொழிலகங்கள், தோட் டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவள் தாயாக மகளாக சகோ தரியாக எவ்வாறு இருப்பினும் சரி


2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவ னை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறி த்துக் கொள்வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்க ளுக்கு உறுதியாய் வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும்.


3- எவையெல்லாம் அவள் மீது கடமையோ அவையனைத்தையும் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங் களையும் அதை நிறைவேற்றும் முறையையும் அறிவது. இன்னும் அவள் நிறை வேற் றக் கடமைப்பட்ட உரிமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வண க்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந்துகொள். (47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் (இப்னுமாஜா) என நபி(ஸல்) அவர்களும் பொதுவா கவே சொல்லியிக்கிறார்கள்.



4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வ தற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் ஆகியோ ருக்கு தனது விருப்பப்படி வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வ தற்கும் உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று உரிமை பெறுகிறார்கள்.


5-விருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம் கணவனது விருப்பத்துடன், திருமணமான பெண்ணாக இருந்தால்! இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப் பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்க ளில் அவர்களுக்கு ஆறுதலும் ஒத்துழைப்பும் வழங்கிக் கொள்ளலாம். அல்லாஹ் வுக்காக என வாய்மையுடன் கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கிவிடுவதும் கூடும்.


6- மரணசாசனம்: அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவிதகாலத்தில் மர ண சாசனம் எழுதிக் கொள்வதற்கும் மரணத்திற்குப் பின்பு அதைச் செயல்படுத்தச் செய்யவும் அவளுக்கு உரிமை உண்டு. அது விஷயத்தில் யாரும் அவளை ஆட்சேப ணை செய்ய முடியாது! ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களைப் போல் பெண்களுக்கும் உள்ளது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யா ரும் யாரையும் தடுக்க முடியாது. என்றாலும் மரணசாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமலிருப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.


7- பட்டாடை, தங்கம் அணிதல்: பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொ


ள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும். ஆயினும் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக இருப்பதும், அரை குறை ஆடை அணிவதும், தலையைத் திறந்து போடுவதும், கழுத்து, மார்பு முதலியவற்றை மறைக்காதிருப்பதற்கும் அவ ளுக்கு உரிமை இல்லை. ஆனால் கணவனிடத்தில் அவ்வாறு செய்வது அவளுக்கு ஹலால் ஆகும்.


8- அலங்கரித்துக் கொள்ளல்: தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொ


ள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சாமா இட்டுக்கொள்ளவும் விரும்பினால் இரு கன்னங்களிலும் உதடுகளிலும் சிகப்புச்சாயம் வைத்துக் கொள்ளவும் செய்ய லாம். மிக அழகிய அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். எனினும் முஸ்லிமல்லாத பெண்களுக்கே உரிய அல்லது தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை அணியக்கூடாது. இவற்றை அவள் அணியக் கூடாது என்பது சந்தே கம் தவறுகளிலிருந்து தூரமாகுவதற்காகவே.


9- உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உண வுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்க ளுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடுமில்லை. அனுமதிக்கப்பட் உணவு- பானம் எனில் அவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்ட வைதான். தடுக்கப்பட்ட உணவு- பானம் எனில் அவை ஆண்களுக்கும் பெண்களு க்கும் தடுக்கப்பட்டவைதான். அல்லாஹ் கூறுகிறான்: உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்களை அல் லாஹ் நேசிப்பதில்லை (7:31) இங்கு இருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

கருத்துகள்