நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை

 


நெருக்கடியான வாழ்வில் பாம்புகள் தரும் வேதனை


இறந்தவனிடத்தில் நன்மைகள் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்கப்படும். அவனிடத்தில் எந்த நன்மையும் இல்லாமல் நல்லுப தேசங்களை மறுத்தவனாக அவன் இருந்தால் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பான். மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் ஏதும் கூற மாட்டான். இதனால் அவனுடைய எலும்புகள் உடையும் அளவிற்கு அவனுக்கு மண்ணறையில் நெருக்கடி தரப்படும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறையில் இறைமறுப்பாளனின் தலைப்புறமாக (நன்மை ஏதும் இருக் கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கு) எதுவும் இருக்காது. அவனது கால்களிடத்தில் (நன்மை ஏதும் இருக் கிறதா? என்று) பார்க்கப்படும். ஆனால் (அங்கும்) எதுவும் இருக்காது. எனவே அவன் திடுக்கிட்டு பயந்தவனாக அமரு வான். உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? என்று அவனிடம் வினவப்படும். அதற்கு அவன் மக்கள் எதையோ கூறிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அவர்கள் கூறியது போல் நானும் கூறிக் கொண்டிருதேன் என்று கூறுவான். நீ உண்மை கூறினாய். இப்படித்தான் நீ வாழ்ந்தாய். இப்படியே மரணித்தாய். இவ்வாறு அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவ னிடம் கூறப்படும். அவனுடைய விலா எழும்புகள் ஒன்றோ டொன்று பின்னிக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். இதைப் பற்றித்தான் அல்லாஹ் (இந்த வசனத்தில்) கூறுகிறான். எனது போதனையை புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல் : தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105


எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம் (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக்க அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறை மறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவனுக்கெதிராக தொண்ணூற்றொன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்க ளுக்குத் தெரியுமா? அவை தொண்ணூற்றொன்பது பாம்பு களாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமைநாள்வரை அவனுடைய உடம்பில் (விஷக் காற்றை) அவை ஊதிக் கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்னது அபீயஃலா (6504)


நெருப்பு வீடு


நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் அதிகமான இடைஞ்சல் களைக் கொடுத்தார்கள். இவர்களின் மண்ணறைகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக என்று இவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். தீயவர்களுக்கு மண்ணறையில் இப்படி ஒரு தண்டனையும் தரப்படலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.


அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்)போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடு களையும், புதைக்குழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள்" என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல் : புகாரி (2931) முஸ்லிம் (1104)


நரகம் காட்டப்பட்டு அச்சுறுத்தப்படுவான்


மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் அவனுடைய கண் ணின் முன்னால் நரகம் கொண்டு வந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். அவன் செல்லவிருக்கும் நரகத்தைப் பார்த்து பயந்து கொண்டே நிம்மதியின்றி மண்ணறை வாழ்கையை அனுபவிப்பான்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங் களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரக வாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக்காட்டப் படும்.) மேலும் "அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்பு கின்றவரை இதுவே (கப்றே ) உனக்கு தங்குமிடம்" என்று கூறப்படும்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


நூல்: புகாரி (1379)கெட்டவன் கைசேதம் அடைய வேண்டும் என்பதற்காக சொர்க் கம் அவனுக்கு முன்னால் காட்டப்படும். அதைப் பார்த்து பார்த்து கைசேதப்பட்டுக் கொண்டே மண்ணறை வாழ்வைக் கழிப்பான்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தின் வாசலை இவனுக்கு திறந்து காட்டுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவனை நோக்கி திறக்கப்படும். அப்போது அல்லாஹ்விற்கு நீ கட்டுப்பட்டு நடந்திருந்தால் இது தான் அல்லாஹ் உனக்கு தயார் செய்த இடமாக ஆகியிருக்கும் என்று கூறப்படும். அவன் மேலும் கைசேதத்தையும் நஷ்டத்தையும் உணருவான். பிறகு இவனுக்கு நரகத்தின் வாசலை திறந்து விடுங்கள் என்று கூறப்படும். அவனை நோக்கி நரகத்தின் வாயில் திறக்கப் படும். இதுதான் உனது இடம். அல்லாஹ் உனக்கு தயார் செய்த தும் இதுதான் என்று அவனிடம் சொல்லப்படும். அப்போது அவன் மென்மேலும் கைசேதத்தையும் நஷ்டத்தையும் உணருவான்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: தப்ரானி பாகம்:3 பக்கம்:105


கடுமையான வேதனை


இந்த உலகத்தில் யாரும் அனுபவித்திருக்க முடியாத அளவிற்கு மண்ணறையின் வேதனை மிகக் கடுமையானதாகும். மண்ணறை வாழ்க்கை என்பது மறுமையின் முதல் நிலையாகும். மறுமை வாழ்வில் தீயவர்களுக்குக் கிடைக்கும் வேதனை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைக் குர்ஆன் விவரிக்கிறது.


அவர்களுக்கு (தீயவர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கையி லும் வேதனை உண்டு. மறுமையின் வேதனை கடுமை யானது. அவர்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவன் எவனும் இல்லை.


அல்குர்ஆன் (13:34)எனது வேதனை தான் துன்புறுத்தும் வேதனை.


அல்குர் ஆன் (15:50)


அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.


அல்குர் ஆன் (22:2)


மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.


அல்குர்ஆன் (20:127)


மறுமையின் வேதனை மிகவும் இழிவுபடுத்தக் கூடியது.


அல்குர்ஆன் (41:16)


மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?


அல்குர்ஆன் (68:33)


வேதனையால் அலறுகிறார்கள்


தீயவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருக் கிறார்கள்.


(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத் தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங் களும் இருந்தோம். அப்போது அவர்களின் கோவேறுக் கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.


அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறை கள் இருந்தன. (இவ்வாறு தான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்து வந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர் கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல் அவர்கள், "இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?" என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "நான் (அறிவேன்)" என்றார்.


நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் எப்போது இறந்தார்கள்?" என்று கேட்டார்கள். அவர், "இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமைக்) காலத்தில் இறந்தனர்" என்று பதிலளித் தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர் களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த் தித்து இருப்பன்" என்று கூறினார்கள்.


பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, "நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாது காப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறினர்.


பிறகு, "மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.


அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)


நூல் : முஸ்லிம் (5502)


ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டு விட்டு, "யூதர்கள் அவர்களது கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்" எனக் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


நூல்: புகாரி (1375)


நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியில் சென்றார்கள். பிலால் (ரலி) அவர் கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மண்ணறையைக் கடந்து சென்றார்கள். அப்போது பிலாலே நான் கேட்டுக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் எனக்கு எதுவும் கேட்கவில்லையே என்று கூறினார்கள். இந்தக் கப்ரில் உள்ளவர் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நபரைப் பற்றி விசாரிக்கப்பட்டது. அவர் ஒரு யூதனாக இருந்தார்.


அறிவிப்பவர்: அனஸ் (ரல)


நூல்: அஹ்மது (12072)


மனிதர்களால் உணர முடியாது


மண்ணறையில் பாவிகள் வேதனை செய்யப்படும் போது அவர் கள் எழுப்பும் அலறலை மனிதர்களையும், ஜின்களையும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் செவியேற்கிறது.


அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவனிடம் "நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


நூல்: புகாரி (1338)


நபியவர்களை அச்சுறுத்திய வேதனை


நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்கு நல்ல வாழ்வையே அல்லாஹ் தருவான் என்பது உறுதியான விஷயம். நன்மையான காரியங்களை நம்மை விட பன்மடங்கு நிறையவே செய்து வந்தார்கள்.


என்றாலும் மண்ணறை வேதனை குறித்து அவர்கள் அச்சப் படாத நாள் இல்லை. தினந்தோறும் அல்லாஹ்விடம் மண்ணறை வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுபவராக இருந்தார்கள்.




நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இயலாமையி லிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைக் குழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று பிரார்த்திப்பது வழக்கம்.


அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


நூல்:புகாரி (2823)


நபி (ஸல்) அவர்கள் அடக்கவிட (கப்று) வேதனையை விட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய ஒரு புதல்வி கூறுகிறார்.


அறிவிப்பவர்: மூசா பின் உக்பா (ரலி)


நூல்: புகாரி (1376)

கருத்துகள்