மண்ணறை தண்டனைக்கான காரணங்கள்

 


மண்ணறை தண்டனைக்கான காரணங்கள்.


உயிருடன் இருக்கும் போது செய்த பாவங்களுக்காக மண்ணறையில் தண்டனை தரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பாவமான காரியங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாவங்களை மன்னித்து அருள்புரியு மாறு அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்த அளவு பாவமான காரியங்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றம் புரிந்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டிட வேண்டும்.


உலகில் புரிந்த குற்றங்களுக்கு மண்ணறையில் வேதனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.




"குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை). 'இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகின்றார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.


அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரலி)


நூல்:புகாரி (3978)


வழிகெட்ட கொள்கையைப் பின்பற்றுதல்


பாவமான காரியங்கள் அனைத்தும் தடண்டனையைப் பெற்றுத் தரக் கூடியதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களினால் மண்ணறையில் கிடைக்கும் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்தப் பாவங்கள் நமக்கு ஏற்படாதவாறு நாம் நடந்து கொண்டால் மண்ணறை தண்டனையி லிருந்து அல்லாஹ் நாடினால் தப்பித்துக் கொள்ளலாம்.


இன்றைக்கு சமுதாயத்தில் பல வழிகெட்ட கொள்கைகள் தோன்றி யிருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.


தர்ஹா வழிபாடு, தனிமனிதர் வழிபாடு போன்றவைகளால் ஒரு சாரார் அல்லாஹ்விற்கு இணை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


நபி (ஸல்) அவர்களைப் போன்று மிர்ஸா குலாம் என்பவனும் நபி என்று நம்பி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு தடம் புரண்டு விட்டார்கள்.


மேலும் குர்ஆன், ஹதீஸ் இந்த இரண்டை மட்டும் மூல ஆதார மாகக் கொள்ளாமல் மற்றவர்களின் கருத்துகளையும் புதுமையான விஷயங்களையும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவதும் மக்களிடையே இருந்து வருகிறது.


குர்ஆனையும், ஹதீஸையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற நேரான கொள்கையை ஏற்று இதைத் தவிர உள்ள அனைத்து வழி கெட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புறக்கணித்தால் மண்ணறை வாழ்க்கையில் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் மண்ணறை வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியாரின் உடலை சவக்குழியில் அடக்கம் செய்து விட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப் பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து, அவனை எழுப்பி *உட்கார வைத்து, "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?" எனக் கேட்பர். நிராகரிப் பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப் பட்டதும் ''எனக்குத் தெரியாது; மக்கள் சொன்னதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்பான். அப்போது அவனிடம் "நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.


அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


நூல் : புகாரி (1338)


யூதர்களாக மரணித்தால் மண்ணறையில் யூதர்கள் வேதனை செய்யப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.


(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, "யூதர்கள் அவர்களின் கல்லறை யில் வேதனை செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)


நூல் : முஸ்லிம் (5504)


இறைவேதத்தை அலட்சியப்படுத்துதல்


இறைவன் வகுத்த சட்டதிட்டடங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நமக்கு திருக் குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் தந்துள்ளான். இவ்விரண்டின் அடிப்படையில் வாழ்ந்தவர் மண்ணறை யிலும், மறுமையிலும் வெற்றி பெறுவார். ஆனால் இந்த உபதேசத் தைக் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி மரணிப்பவருக்கு மண்ணறையில் நெருக்கடியான வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.


எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.


அல்குர்ஆன் (20:124)


எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20: 124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டனை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: இப்னு ஹிப்பான் (3174)


எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடி யான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 : 124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப் பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப் படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). எனது உயிர் எவனது கைவசத்தில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதாணை யாக அவனுக்கெதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரி யுமா? அவை தொண்ணூற்று ஒன்பது பாம்புகளாகும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள்வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக் கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்து கொண் டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்னது அபீயஃலா (6504)


புறம் பேசுதல்


இன்றைக்கு பாவம் என்று உணரப்பட்டு அதிகமானோரால் செய்யப்பட்டு வரும் குற்றம் புறம் பேசுவதாகும். புறம் பேசியதற்காக ஒருவன் மண்ணறையில் தண்டிக்கப்படுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, "இவ் விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும்பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்" என்று கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ் வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?" என்று கேட்டதும், "இவ் விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப் படக் கூடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: புகாரி (1361)


சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருத்தல்


மலமும், சிறுநீரும் மனிதனின் உடம்பிலிருந்து வெளிப்படும் அசுத்தங்களாகும். ஆனால் மலம் கழித்தால் மக்கள் சுத்தம் செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.


சிறுநீரை தூய்மையான தண்ணீரைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு நீர் கிடைத்தாலும் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிற அளவிற்கு சிறுநீர் ஒன்றும் பெரிய அசுத்தமில்லை என்று கருதுகிறார்கள்.


ஆனால் உண்மையில் மலத்திலிருந்து துர்வாடை கிளம்புவது போல் சிறுநீரிலிருந்தும் துர்வாடை கிளம்புகிறது. மலத்தில் நோய்க் கிருமிகள் இருப்பதுபோல் சிறுநீரிலும் நோய்க் கிருமிகள் இருக்கிறது.


எனவேதான் இவ்விரண்டு அசுத்தங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. சுத்தம் செய்யா விட்டால் மண்ணறையில் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக் கிறது. சிறுநீர் விஷயத்தில் மட்டுமில்லாமல் எல்லாக் காரியங்களிலும் நாம் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ரு களைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ் விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும்பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்" என்று கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?" என்று கேட்டதும், "இவ் விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப் படக் கூடும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்:புகாரி (1361)


திருட்டு


திருடப்படுகின்ற பொருள் திருடியவனுக்கு நெருப்பாக மாறும் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வரும் சம்பவத்தில் உணர்த்தி யுள்ளார்கள்.


நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 'கைபர்' தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ, வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லாத கால் நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருள்கள் ஆகியவற்றையே பெற்றோம். 'பனுள்ளுபைப்' எனும் குலத்தாரில் ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் அல்லாஹ் வின் தூதர் (ஸல் ) அவர்களுக்கு 'மித்அத்' எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'வாதில் குரா எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது 'மித்அம்' என்ற அந்த அடிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து)இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்று விட்டது. இதைக் கண்ட மக்கள் "அவருக்குச் சொர்க்கம் கிடைத்து விட்டது; வாழ்த்துக்கள்" என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள், "அப்படிச் சொல்லாதீர்கள். என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைப்பர் அன்று அவர் எடுத்துக் கொண்டு விட்ட போர்வை அவர் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்கள். இதை மக்கள் செவியேற்ற போது, ஒருவர் நபி (ஸல் ) அவர்களிடம் 'ஒரு செருப்பு வாரை' அல்லது 'இரு வார்களைக்' கொண்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண நெருப்பு வாராக இருந்திராது. மாறாக) 'நெருப்பு வாராக' அல்லது 'இரு நெருப்பு வார்களாக' மாறியிருக்கும்" என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி),


நூல்: புகாரி (6707)அவதூறு கூறுதல், வட்டி வாங்குதல், விபச்சாரம் புரிதல்


அவதூறு கூறுதல், குர்ஆனைப் புறக்கணித்தல், விபச்சாரம் செய்தல், வட்டி வாங்குதல் போன்ற குற்றங்களுக்கும் மண்ணறையில் தண்டனை தரப்படுவதாக நபி (ஸல்) அவர்களுக்கு கனவின் மூலம் காட்டப்பட்டது.


நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால் "அல்லாஹ் நாடியது நடக்கும்" என்று கூறுவார்கள்.




இவ்வாறே ஒருநாள், "உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?" என்று கேட்டதும் நாங்கள் "இல்லை" என்றோம். அவர்கள், "நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்று கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந் தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த் தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்த போது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன் னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும் போது பாறை உருண்டு ஓடி விட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறி விட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். எனவே நடந் தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும், அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்த பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்து விட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார் கள். நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன். அதற்கும் அவர் கள் 'நடங்கள்' எனக் கூறிடவே மேலும் நடந்து ஓர் இரத்தஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்று கொண்டிருந்தார். அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியெற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்கு தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' எனக் கூறிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். நான் இருவரிடமும் "இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள்!" எனக் கேட்டேன். அதற்கு இருவரும் "ஆம், முதல் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப் பட்ட நிலையில் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனை கற்றுக் கொடுத்ததும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கி விட்டார்; பகலில் அதை செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த் தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்ற வர்கள் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: சமுரா பின் ஜூன்துப் (ரலி),


நூல்:புகாரி (1386)


மேலுள்ள குற்றங்களை செய்தவர்களுக்கு மறுமை நாள் வரை தண்டனை தரப்படும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. மறுமைநாளிற்கு முன்னால் உள்ள மண்ணறை வாழ்க்கையைப் பற்றித்தான் இச்சம்பவம் விவரிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


வாங்கிய கடனை ஒப்படைக்காமல் இருத்தல்


வாங்கிய கடனை உரியவரிடத்தில் முறையாக ஒப்படைக்கா விட்டால் அது பெரும் குற்றமாகும். கடனை அடைக்காமல் இறந்து விட்டால் இறந்தவரின் உறவினர்கள் அக்கடனை அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணத்திற்குப் பிறகு கிடைக்கும் பாக்கியங்களை மரணித்தவரால் அனுபவிக்க முடியாத துர்பாக்கிய மான நிலை ஏற்படும்.


நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கை யாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகிற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),


நூல் : திர்மிதி (999)


ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தொழுது விட்டு இங்கே இன்னாருடைய கூட்டத்தாரில் யாராவது (புதைக்கப்பட்டார் களா?) என்று மூன்று முறை கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு யாரும் பதில் கூறவில்லை. இறந்து விட்ட இந்த மனிதர் தன் மீதிருந்த கடன் காரணத்தால் சொர்க்கத்தை விட்டும் தடுக்கப்பட்டு விட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்கு பதிலாக நீங்கள் அவரது கடனை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் அல்லாஹ்வின் வேதனையின்பால் அவரை ஒப்படைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி),


நூல் : மஸானீது ஃபிராஸ் (16)


கருத்துகள்