இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை
இறந்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் சில நன்மையான காரியங்களைச் செய்வதால் இறந்தவருக்கு நன்மை ஏற்படுகிறது. அந்த நன்மையான காரியங்கள் எதுஎதுவென்று நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.நபியவர்கள் காட்டித் தந்த விஷயங்களைத் தாண்டி நாமாக எதையும் செய்யக் கூடாது.
இறந்தவருக்காக தர்மம் செய்யலாம்
இறந்தவருக்காக உயிருடன் இருப்பவர்கள் தர்மம் செய்தால் அதனால் இறந்தவர் பலனடைவார். இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் திடீரென இறந்து விட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந் தால் நல்லறம் (தான தர்மம்) செய்திப்பார். எனவே அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (1388)சஅத் பின் அபாதா அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம் (பயனளிக்கும்)" என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (2756)
இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யலாம்
மரணித்தவர் விசாரணையில் வெற்றி பெற வேண்டும் என்பதற் காகவும், நல்ல வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டும் என்பதற்காக வும் அல்லாஹ்விடம் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
மரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார் கள். (இறந்து விட்ட) உங்களுடைய சகோதரனுக்காக பாவ மன்னிப்பு தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று அவருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது அவர் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல் : அபூதாவூத் (2804)நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் "அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸல்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்ஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்" என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.
(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக!
கருணை புரிவாயாக! இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவா யாக! இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவி அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்து வதைப் போன்று தூய்மையாக்குவாயாக! மேலும் இங்குள்ள வீட்டை விட சிறந்த வீட்டையும், இங்குள்ள குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தையும், இங்குள்ள துணையை விடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! மண்ணறை யின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பின் வேதனையி லிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக!)
அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்து விட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (1757)இறந்தருக்காக கடமையான நோன்பை நோற்றல்
இறந்தவர் மீது கடமையான நோன்பு அல்லது நேர்ச்சை செய்த ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீதிருந்த சுமை நீங்கிவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (1952)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ் வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகி யிருந்த நிலையில் இறந்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவ தற்கு அதிகத் தகுதி படைத்தது" என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1953)
இறந்தவர் சார்பில் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுதல்
இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம். அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீதிருந்த ஹஜ் கடமை நீங்கி விடுகிறது.
"கஸ்அம்' எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சய மாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜை கடமை யாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?" எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்!" என்றார்கள். இது 'விடைபெறும்' ஹஜ்ஜின் போது நிகழ்ந்தது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (1513)
(உக்பா பின் ஆமிர் என்றழைக்கட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் சகோதரிக்கு கடன் இருந்தால் அதை நீதானே நிறைவேற்றுவாய்?" எனக் கேட்டார்கள். அவர், "ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்" என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (6699)
இறந்தவர் விட்டுச் சென்ற கடனை நிறைவேற்றுதல்
ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்து விட்டால் கடன் கொடுத்தவர் மறுமைநாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவரின் நல்லறங்கள் அவருக்கே செல்ல வேண்டும் என்று வாரிசுகள் விரும்பினால் அவர்பட்ட கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என் தந்தை உஹதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும் விட்டுச் சென்றார்கள். பேரீச்சம்பழம் பரிக்கும் காலம் வந்தபோது நான் அல்லாஹ் வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உஹதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும், தம் மீது கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாறு நான் விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ போய் ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம்பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை" என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, "உன் கடன்காரர்களைக் கூப்பிடு" என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர் களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ''ஒரே ஒரு பேரீச்சம்பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகளிடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.) அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்" என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சி விட்டன. குறையாமல் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந் திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதிலிருந்து ஒரேஒரு பேரீச்சம் பழம் கூட குறையாததைப் போல் அது அப்படியே இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி (2781)(உக்பா பின் ஆமிர் என்றழைக்கட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் சகோதரிக்கு கடன் இருந்தால் அதை நீதானே நிறைவேற்றுவாய்?" எனக் கேட்டார்கள். அவர், "ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)" என்றார். நபி (ஸல் ) அவர்கள், "அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்" என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (6699)
மேலுற்ற விஷயங்களை இறந்தவருக்காக அவரது உறவினர் கள் செய்வதால் இறந்தவருக்கு சிறந்த மண்ணறை வாழ்வு அமையலாம்.
தவறான நம்பிக்கைகள்
கப்ரில் உள்ளவர்கள் செவியேற்பார்களா?
உயிருள்ளவர்கள் பேசுவதை இறந்து விட்டவர்கள் செவியேற் பார்கள் என பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தங்களுடைய தேவைகளை இறந்தவர்களிடத்தில் முறையிடுவதன் மூலம் இணைவைப்பு என்ற கொடிய பாவத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தில் நடக்கின்ற எந்த ஒரு நிகழ்வையும் பார்க்கவோ, கேட்கவோ இறந்தவர்களால் முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அனைத்தையும் செவியேற்கின்ற வல்ல இறைவனிடம் மட்டும் நம்முடைய தேவைகளை முறையிட வேண்டும்.
நீர் இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாது!
அல்குர்ஆன் (27:80)உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார் கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்கள் நீர் செவியேற்கச் செய்பவ ராக இல்லை.
அல்குர்ஆன் (35:22)
நீங்கள் அவர்களை (இறந்தவர்களை) அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவி யேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத்நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்குர் ஆன் (35:14)
செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தோரை அல்லாஹ் (மறுமை நாளில் தான்) உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
அல்குர்ஆன் (6:36)
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்!
அல்குர்ஆன் (7:194)
கப்ரில் உள்ளவர்கள் உதவி செய்வார்களா?
இறந்தவர்கள் நல்லவர்களாக இருந்தால் மறுமை நாள் வரும் வரை மண்ணறையில் அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள். அவர்களுக்கும், பூமியில் உள்ளவர்களுக்கும் மத்தியில் எந்த விதமான தொடர்பும் இருக்காது. இறந்தவர்களால் உயிருள்ளவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது.
அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இய்லாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.
அல்குர்ஆன் (7:197)
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படு கிறது. அதைச் செவிதாழ்த்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது.ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆன் (22:73)
உங்கள் இறைவன் அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
அல்குர்ஆன் (35:13)
(மண்ணறையில் நல்லடியார்களிடம் விசாரணை முடிந்தவுடன்) உறங்குங்கள் என்று அவரிடம் சொல்லப்படும். அதற்கு அவர் எனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று (எனக்குக் கிடைத்த நல்வாழ்க்கையை அவர்களிடம் கூறி விட்டு வருகிறேன் என்று கூறுவார். அதற்கு இரு வானவரும் "அல்லாஹ் உன்னை இந்த இடத்திலிருந்து எழுப்பும் வரை புது மாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்கு. புது மாப்பிள்ளையை அவருக்குப் பிரியமானவரைத் தவிர வேறு யாரும் எழுப்ப மாட்டார்கள்” என்று கூறிவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி (991)வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்
வெள்ளிக்கிழமையன்று மரணித்தால் மரண வேதனை கிடையாது என்று சிலர் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில நபி மொழிகளும் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் பலவீனமானது.
யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையி லிருந்து காக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூயஃலா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.
இதுபோன்ற கருத்தில் மற்றொரு ஹதீஹ் திர்மிதி 994 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமானது என்பதை இமாம் திர்மிதீ அவர்களே அந்த ஹதீஸுக்குக் கீழே தக்க சான்று களுடன் விளக்கியுள்ளார்.
இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294 வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர்.
6359 வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பவர் அறிவிக்கிறார். இவர் யார் என்று அறியப்படாதவர்.
எனவே இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமான தாக உள்ளதால் வெள்ளிக்கிழமை மரணித்தால் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்புவது தவறாகும்.
ஒரு மனிதர் எந்த நாளில் எந்த மாதத்தில் எந்த வயதில் எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
முற்றும்.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர்
அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.
நூல் பெயர்
: குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்க்கை🛐👍
ஆசிரியர்🖋S. அப்பாஸ் அலீ M.I.Sc.💐
மொழி தமிழ்✨️
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!