நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை💐


 (நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை


சந்தோஷமான செய்தி கூறப்படும்


நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப் படுவார்கள். சொர்க்கம் பரிசாகக் கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர் களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.


அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்படும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக! எனது சொர்க்கத் தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)


அல்குர்ஆன் (89:27)


"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" எனக் கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சா தீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!" எனக் கூறுவார்கள்.


இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங் கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தோக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக் கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.


அல்குர்ஆன் (41:30)


இன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டு விட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து மண்ணறைக்குள் அடக்கி விட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார்.




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங் கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், "என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்" என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், "கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல் கிறீர்கள்?" என்று கூறும். இவ்வாறு கூறப்படும் செய்தியை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.


அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


நூல்: புகாரி (1316)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிராறோ, அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக் கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான், அப்போ "அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர் கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தாளே செய்வோம்?" என்று கேட்டேன்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அல் லாஹ்வைச் சந்திப்பது என்பதற்கு பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்கு சொர்க்கத்தை வழங்கவிருப்பதாவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார். இறை மறுப்பாளருக்கு. (மரண வேளை நெருந் நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப் படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார்.


அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்" என்று (விளக்கம்) சொன்னார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல் : முஸ்லிம் (5208)


நல்லவர்களுக்கு வானவர்களின்


வரவேற்பு


நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது.


மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் சொன்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவரைச் சுற்றி அமர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார் கள். திடீரென தன் தலையை உயர்த்தி கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்பு மரணத்தருவாயிலுள்ள ஒரு இறைநம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.


மூமீனான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண் டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிராகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளை யும், சுவர்க்கத்து நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.


அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.


அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.


அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடை பெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (இறைநம்பிக்கை யாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்து விட்டு பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்.


அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)


நூல்: அஹ்மத் (17803)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளரின் உயிர் பிரியும் போது அதை இரு வானவர்கள் எடுத்துக் கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள்.


அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), “ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக! நீ குடியிருந்து வந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!" என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், "இதை இறுதி தஹ்ணை வரை (மறுமைநாள் வரை தங்க வைப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்!" என்று கூறுவான்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல் : முஸ்லிம் (5510)


இலேசான விசாரணை


அடக்கம் செய்யப்பட்டவுடன் மரணித்தவருக்கு விசாரணை ஆரம்பித்து விடுகிறது. வானவர்கள் மிகச் சில கேள்விகளை மட்டும் கேட்பார்கள். நல்லடியாராக இருந்தால் இலகுவாக கேள்விகளுக்கு பதில் கூறிவிடுவார். பிறகு அவருக்கு இன்பமான வாழ்வு ஆரம்பித்து விடுகிறது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு வானவர்கள் இறந்தவரிடம் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி உனது இறைவன் யார்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். பிறகு உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர், இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று கூறுவார். இதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதினேன். அதனை விசுவாசம் கொண்டேன். அதனை உண்மைப்படுத்தினேன் என்று கூறுவார்.


எனது அடியான் உண்மை கூறிவிட்டான். அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள். சுவர்க்கத் தின் ஒரு கதவை அவனுக்காகத் திறந்து விடுங்கள் என்று ஒருவர் வானிலிருந்து அப்போது கூறுவார். அவனுடைய கண்பார்வை எட்டும் அளவிற்கு அவனுடைய கப்ரு விசாலமாக்கப்படும்.


அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உனக்கு மகிழ்வூட்டக்கூடிய நன்னாள் இதுவாகும் என்று கூறுவார்.


அந்த இறைநம்பிக்கையாளர் அம்மனிதரை நோக்கி நீ யார்? என்று கேட்பார். அதற்கு அம்மனிதர் நான்தான் (நீ உலகில் செய்து வந்த) உனது நல்ல காரியங்கள் என்று கூறுவார். அப்போது அந்த இறைநம்பிக்கையாளன் இறைவா! நான் தேடி வைத்துள்ள செல்வமான (நன்மையையும்) எனது குடும்பத்தினர்களையும் சென்றடைய மறுமைநாளை இப்போதே ஏற்படுத்திவிடு என்று கூறுவார். மரண வேளையின் போது இறைநம்பிக்கையாளரின் நிலை இதுவாகும்.


அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)


நூல்: அஹ்மத் (17803)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியாரின் உடலை சவக்குழியில் அடக்கம் செய்து விட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து, அவனை எழுப்பி உட்கார வைத்து, "முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?" எனக் கேட்பர். இதற்கு, "இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்" என்பர். பிறகு "(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்குக் கிடைக்க விருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்கு சொர்க்கத்தில் தங்கு மிடத்தை ஏற்படுத்தியுள்ளான்" என்று அவரிடம் கூறப் பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பர்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


நூல்: புகாரி (1338)இறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமைநாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார்.


அறிவிப்பவர்: கஃப் பின் மாலிக் (ரலி)


நூல் : நஸயீ (2046)


நெருக்கத்திற்குப் பிறகு விசாலமாக்கப்படும்


நல்லவராக இருந்தாலும், தீயவராக இருந்தாலும் இறந்தவரை கப்ரில் வைத்தவுடன் மண்ணறை அவரை ஒரு முறை நெருக்கும். மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் விலா எலும்புகள் ஒன்றோ டொன்று கோர்த்துக் கொள்கின்ற அளவிற்கு அது தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும். நல்லவனாக இருந்தால் தொடர்ந்து நெருக்காமல் அவனை விட்டுவிடுகிறது. பிறகு அவருடைய மண்ணறை விசாலமாக்கப்பட்டு அவர் நெருக்கடியில்லாமல் நிம்மதி யாக மண்ணறை வாழ்வை அனுபவிப்பார்.


சிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரை யும் மண்ணறை நெருக்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்கத்தி லிருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதிலிருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


நூல்: தஹதீபுல் ஆஸார் (797)


உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்? என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி (நல்லவரிடம்) கேட்கப்படும். அதற்கு அவர் இறைவ னின் தூதர் என்று நான் நம்பினேன். அவர் எங்களிடத்தில் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உண்மையாளர் என்று கருதி அவரை நாங்கள் பின்பற்றினோம் என்று கூறுவார். அதற்கு நீ உண்மையே கூறினாய். இவ்வாறே நீ வாழ்ந்து மரணித்தாய். இதே நிலையிலேயே அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவரிடம் கூறப்படும். பிறகு அவருடைய பார்வை எட்டுகின்ற அளவிற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.


அறிவிப்பவர்: அயூஹுரைரா (ரலி)


நூல்: தப்ரானீ பாகம்:3, பக்கம்:105


இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும்


பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டப் பெருக்குபவ ராக இருந்த கறுத்த “பெண்” அல்லது “இளைஞர்” ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார் கள். "அவர் இறந்து விட்டார்" என மக்கள் தெரிவித்தனர். "நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?" என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரது மண்ண றையை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தி னார்கள். பிறகு “இந்த அடக்கத்தலங்கள் அவற்றில் வசிப் போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்" என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)


நூல் : முஸ்லிம் (1742)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளன் மண்ணறையில் பசுமையான தோட்டத்தில் இருப்பார். எழுபது முழம் வரைக்கும் அவருடைய மண்ணறை விசாலமாக்கப்படும். பௌர்ணமிஇரவில் சந்திர னின் ஒளியைப் போல் அவருக்கு வெளிச்சம் தரப்படும்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்னத் அபீ யஃலா (6504)


மரணித்தவரின் மண்ணறையை விசாலமாக்குமாறும் ஒளிகொடுக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதன் மூலம் நல்லவர்களுக்கு மண்ணறையில் ஒளி தரப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு, "உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப் பின்தொடர்கிறது" என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமீன்' கூறுகின்றனர்" என்று கூறினார்கள். மேலும் "இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரை விடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.


அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி) நூல் : முஸ்லிம் (1678)

கருத்துகள்