நேர்மறை சிந்தனைகளே ஒளிமயமான எதிர்காலம்!


 நேர்மறை சிந்தனைகளே ஒளிமயமான எதிர்காலம்!


இன்று நம்மில் பலர் மன அழுத்தத்திற்கும் புதிது புதிதான நோய்களுக்கும் பலியாவதை நாம் அன்றாடம் கண்டு கொண்டிருக்கிறோம்


அதற்கு சிந்தனைகளே! அடிப்படையான காரணம் எதிர்மறையான


வாழ்வில் விரக்தி, வியாபாரத்தில் தோல்வி, நட்பில் விரிசல் இன்னும் பல வாழ்வின் பின்னடைவுகளாக காணப்படுகிறது.


ஒரு சிறிய நேர்மறையான சிந்தனை ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய சித்தாந்தங்களையும் சமூகத்தையும் உருவாவதற்கு காரணமாக இருந்தது என்றால் அது மிகையானதல்ல.


நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) தங்களது மனைவி ஹாஜர், புதல்வர் இஸ்மாயில் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களையும் பாலைவனத்தில் விட்டு சென்ற பொழுது, நபி அவர்களின் துணைவியார் கேட்ட ஒரே கேள்வி இது இறை கட்டளையா?


எங்கு புற்பூண்டுகளும் நீரும் உணவும் மனிதர்களும் விலங்குகளும் அறவே இல்லாமல் இருந்ததோ அங்கு எங்களை விட்டு செல்கிறீர்களே என்று கேட்கிறார்கள். உடனே இப்ராஹீம் நபி ஆம் என்றார்கள். ஹாஜர் அம்மையார் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நேர்மறை சிந்தனைகளை கையாளுகிறார்கள். அப்படி என்றால் இறைவன் நம்மை கைவிட மாட்டான் என்று கூறுகிறார்கள்.


இந்த சிந்தனையால் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் இன்று மிகப்பெரிய ஓர் இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியது மட்டுமல்ல மக்கமா நகரம் பன்னாட்டு மக்கள் சங்கமிக்கும் இடமாகவும், இஸ்லாமிய கலாச்சார, பண்பாட்டின் கோபுரமாகவும், முழு உலகத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் கிப்லாவாகவும் (வழிபாட்டு திசையாக) ஒரு கலங்கரை விளக்காக மாறியது.


ஹாஜர் அம்மையாரின் நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடே இந்த ஒரு மிகப் பெரிய மாற்றமும் இன்னும் ஒளிமயமான எதிர்காலமும்.


கனடாவின் எழுத்தாளர் Brian Tracy -பிரியான் டிரேசி தனது பிரபலமான புத்தகமாகிய


"Change your thinking change your life" A அது உன் வாழ்க்கையை மாற்றும்" என்ற புத்தகத்தில் இந்த நேர்மறையான சிந்தனைகளை நமது வாழ்வின் வசந்த கால மாற்றத்திற்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்.


வில்லியம் ஜேம்ஸ் கூறியதாக ஒரு கூற்றைக் கூறுகிறார்:


"உளவியல் தத்துவத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது உங்களின் சிந்தனையில் நீங்கள் பின்னால் என்ன ஆகவேண்டும் என்று ஒரு படத்தை வரைகிறீர்கள் என்றால் அதை சிறிது காலம் சிந்தனையில் தக்க வைத்துக் கொண்டால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதாகவே நீங்கள் மாறி விடுவீர்கள்.


அதைத்தான் இஸ்லாம் தவக்குல் என்று கூறுகிறது (அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பது) நாம் புரியும் காரியங்களில் வெற்றி கொள்ள இறைவனின் மீது நிலைகுலையாத நம்பிக்கை வைத்து நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது உறுதியாகக் கிடைக்கும். இறையருளால் வெற்றி


‎‫عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ‬‎


(ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.


(திருக்குர் ஆன் 3:159)

கருத்துகள்