தன்னை விட கீழ் நிலையில் இருப்போரை அவதானித்தல் வேண்டும்

 


தன்னை விட கீழ் நிலையில் இருப்போரை அவதானித்தல் வேண்டும்


இது பற்றி நபியவர்கள் கூறும் போது


: அன்சரோவா ஆல் மன் ஹு அஸ்ஃபல் மங்கம் வலா டன்ஸரூவா ஆல் மன் ஹு ஃபூக்க்ம்


‎‫فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم "‬‎


"உங்களை விட கீழ் நிலையில் இருப்பவனைப் பாருங்கள். உங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவனைப் பார்க்காதீர்கள். ஏனெனில் இதுவே நீங்கள் அல்லாஹ்வின் நிஃமத்துக்களை அற்பமாக காணாமல் இருக்க மிகவும் பொருத்தமானது." (புகாரீ, முஸ்லிம்) என்று கூறினார்கள்.




இந்த மேலான முறையை அடியான் அனுசரித்து நடப்பானாகில் அவன் ஏனைய மனிதர்களை விடவும் தன்னை உயர்வாகக் காண்பான் என்பது நிச்சயம். அப்பொழுது அவனுடைய நிலை எப்படி இருந்த போதிலும் உடல் ஆரோக்கியத்திலும், ஆகாரத்திலும் தன்னுடைய நிலை எத்தனையோ பேர்களை விடவும் மேலோங்கி இருக்கக் காண்பான். அதனால் அவனின் கவலைகள் நீங்கி அவனுக்கு சந்தோசம் அதிகரிக்கும். மேலும் தன்னிலும் உயர்ந்தவர்களை அவன் காணும் போது அவர்களைப் பற்றிய பொறாமையும் அவனுக்கு ஏற்படாது.


இவ்வாறு அல்லாஹ் தனக்களித்துள்ள வெளிப் படையான, மறைவான நிஃமத்துக்களையும் மற்றும் மாக்க விடயத்திலும், உலக விடயத்திலும் அல்லாஹ் தனக்களித்துள்ள அருட்கொடை களையும் பற்றி அடியான் எப்பொழுதும் சிந்திக்கின்ற போது, தனக்கு அல்லாஹ் நிஃமத்துக்களை நிறைய தந்துள்ளான் என்பதையும் பலதரப்பட்ட தீமைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துள்ளான் என்பதையும் அவன் காண்பான். இதனால் அவனின் கவலைகள் நீங்கி அவனுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.


கவலை தரும் காரியங்களைத் தவிர்த்தல்


கவலைகள் நீங்கி மகிழ்ச்சியேற்பட மற்றுமொரு வழியாக விளங்குவது, கவலை ஏற்படுத்தும் விஷயங்களை மனதை விட்டும் நீக்கிவிடுவதாகும்.


கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்பட மற்றுமொரு வழி


மனதை விட்டும் கவலை தரும் காரியங்களை


அகற்றுவதாகும். கடந்த காலங்களை திரும்பப்


பெற வாய்ப்பில்லை. எனவே அது பற்றிச்


சிந்திப்பது வீண். மேலும் அது மடமையும்


பைத்தியமுமாகும். ஆகையால் இவற்றை மறந்து


விட வேண்டும். இதனால் மகிழ்ச்சி பெற வழி


பிறக்கும். இத்தகைய விடயங்களை மறக்க


மனதுடன் போராடுவது அவசியம். மேலும் ஒரு


காரியத்தில் இறங்கும் போது அதனால் எதிர்


காலத்தில் வறுமை அல்லது ஏதே 30/47


நோய்களுக்கு தான் முகம் கொடுக்க நேரிடு மோ


என்று கற்பனை செய்யக் கூடாது. ஏனெனில்


எதிர்காலத்தைப் பற்றிய அறிவு அல்லாஹ்


ஒருவனிடமே உண்டு. எனவே அது பற்றி வீணாக


சிந்திக்காது, நல்லதை அடையவும், தீயவைகளை


விட்டும் தவிர்ந்து கொள்ளவும் முயற்சி செய்வதே


அடியானின் பொறுப்பு. மேலும் எதிர் காலத்தைப்


பற்றிக் கவலை கொள்ளாமல் அதன் பொறுப்பை


அல்லாஹ் விடம் ஒப்படைத்து விட்டு அமைதியுடன் காரியத்தில் ஈடுபடல் வேண்டும்.


அப்பொழுது மனம் ஆறுதல் அடையும், நிலைமைகள் சீரடையும், கவலைகள் நீங்கும் என்பதை அடியான் புரிந்து கொள்வது அவசியம்.


மேலும் எதிர்கால விளைவுகளுடன் தொடர்புள்ள விடயங்களில் கவணம் செலுத்தும் போது ரஸூல் (ஸல்) அவர்கள் ஓதி வந்த இந்த துஆவை ஓதிக் கொள்வது பயன் மிக்கதாகும்.


‎‫


"யா அல்லாஹ்! என்னுடைய காரியத்துக்கு பாதுகாப்பைத் தரும் என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீராக்கித் தருவாயாக. என் வாழ்வு அமைந்திருக்கும் எனது உலக விவகாரங்களையும் சீராக்கித் தருவாயாக. மேலும் நான் திரும்பிச் செல்லவுள்ள மறுமையையும் சீராக்கித் தந்தருள் வாயாக. நன்மைகள் செய்வதற்காக என் வாழ்க்கையை அதிகப்படுத்துவாயாக. எல்லா தீமைகளை விட்டும் என் மனதை நிம்மதி பெறச் செய்வாயாக.” (முஸ்லிம்)


‎‫"யா அல்லாஹ்! நான் உன் அருளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றேன். ஒரு நொடியேனும் என்னை என் மனதிடம் சாட்டி விடாது, எனது சகல காரியங்களையும் சீராக்கித் தந்தருள். உன்னைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒருவனும் இல்லை. (அபூ தாவூத்)


எனவே அடியான் தன் காரியங்களில் முயற்சி செய்யும் வேளையில், மார்க்கம் மற்றும் உலக விவகாரங்களின் எதிர்கால நலன்களை உள்ளடக்கிய இந்த பிரார்தனைகளை தூய எண்ணத்துடன் ஓதி வருவானாகில் அவனின் எண்ணத்தை அல்லாஹ் அநுகூலமாக்கித் தருவான், தன்னிடம் அவன் கேட்டதையும் தந்தருள்வான். அப்போது அவனின் கவலைகள் சந்தோஷங்களாக மாறிவிடும்.


மேலும் பேரிழப்புக்கள் ஏற்படும் போது அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனப் பலத்தை பெறுவ தற்காக, சாதாரண அவலங்களை இலேசானவை யாகக் காண்பதுவும் அதற்கு மனதைப் பழக்கப் படுத்திக் கொள்வதும் அவசியம். இவ்வாறு முடிந்த வரையில் எல்லா நெருக்கடிகளையும் இலகுவான வையாக ஆக்கிக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அப்பொழுது கவலைகளும் துன்பங்களும் இல்லாமல் போய் விடும். அது மட்டுமில்லாமல் அதற்குப் பதிலாக நன்மைகளைக் கொண்டு வரவும், அடியானுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை நீக்கிக் கொள்ளவும் அல்லாஹ்விடம் வாய்ப்புண்டாகும்.


அடியானை பீதி, நோய், வறுமை,மற்றும்


அவனின் விருப்பத்திற்குரிய விடயங்களின்


இழப்புக்கள் போன்ற நிகழ்வுகள் பீடிக்கும் போது


அவனின் மனம் அதனை அமைதியுடன் ஏற்றுக்


கொள்ளும். பின்னர் அதனை விடவும் பெரிய


கஷ்டங்கள் வருகின்ற போது அதனையும் அவன்


ஏற்றுக் கொள்ளும் மன உறுதி அவனிடம்


இருக்கும். ஏனெனில் வெறுப்புக்களை ஏற்றுக்


கொள்ளும் மனப்பாண்மையானது பெரிய


துயரங்களை இலகுவாக்கும். அதன் கடுமையைக்


குறைக்கும். குறிப்பாக தன் சக்திக்கு உட்பட்ட


வரை கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதற்கான


பழக்கத்தை ஏற்டுத்திக் கொண்டால், பீடித்துள்ள


துன்பங்களின் பால் கவணம் செலுத்த இடம்


அளிக்காத, பயனுள்ள இந்த முயற்சி, தீமைகளை


எதிர்க்கும் மனப்பலம் ஆகிய இரண்டு


தன்மைகளும் அவனிடம் சங்கமிக்கும். அத்துடன்


அவனிடம் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை


உறுதியாக இருக்கின்றபடியால், அவன் இந்த


கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டதன் பயனாக,


அல்லாஹ்விடம் அவன் உடனுக்குடனான மற்றும்


தாமதமான கூலியை எதிர்பார்த்த வண்ணம்


இருக்கின்றான் என்பதிலும், அத்துடன் சிறப்பான


இவ்வணுகு முறையில் அவனுக்கு மேலும் சந்தோஷத்தையும், மன மலர்ச்சியையும் ஏற்படுத்தத் தக்க பெரும் பயன் உண்டென்பதிலும் சந்தேகமில்லை. இவை அனுபவத்தில் காணப்படும் உண்மைகள். இதனை அனுபவத்தில் கண்டவர்கள் ஏராளம்.

கருத்துகள்