நிம்மதியான வாழ்வே நல் வாழ்வு

 


நிம்மதியான வாழ்வே நல் வாழ்வு


நிம்மதியான சந்தோசமான வாழ்வே, சரியான நல் வாழ்வு, எனினும் அது குறுகியது என்பதை புத்திசாளி அறிவான். எனவே கவலையைக் கொண்டு வரும், உளத்தூய்மையைக் கலங்கப் படுத்தும் காரியங்களின் மூலம் அதில் குறை ஏற்படாதவாறு கவணித்துக் கொள்வது அவசியம். இல்லா விட்டால் நல் வாழ்வில் கலங்கம் ஏற்பட்டு விடும். ஆகையால் வாழ்வில் கவலை தரும் காரியங்களையும், உளத்தூய்மையைக் கலங்கப் படுத்தும் காரியங்களையும் அப்புறப் படுத்தும் விடயத்தில் அவன் கவணம் செலுத்துவான். இவ்விடயத்தில் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் மத்தியில் வேறுபாடு எதுவும் இருக்காது. எனினும் இந்தப் பண்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் விடயத்தில் முஃமினின் பங்களிப்பும், அதன் மூலம் அவன் அடையும் பயனும் அதிகம்.


மேலும் தனக்கு விருப்பமில்லாத ஏதும் ஏற்படும் போது அல்லது ஏதேனும் பீதி உண்டாகும் போது அதனை தான் பெற்றுள்ள மார்க்க சம்பந்தமான, உலக சம்பந்தமான அருட்கொடைகளு டன் ஒப்பிட்டு பார்த்தல் வேண்டும். அப்பொழுது தனக்குக் கிடைத்துள்ள நிஃமத்துக்கள் அதிகம் என்பதும்,தன்னை அடைந்துள்ள வெறுப்பான சம்பவங்கள் அற்பமானவை என்பதும் தெளிவாகும்.


அவ்வாறே தனக்கேற்பட்டிருக்கும் அச்சமூட்டும் தீய நிகழ்வுகளை, தான் பெற்றுள்ள அமைதியான வாய்ப்புக்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் வேண்டும். அச்சமயம் வலிமை வாய்ந்ததை, பலவீனம் மிகைத்து விடும் படி இடமளித்தலாகாது. இதன் மூலம் அவனுடைய துக்கம் துயரங்கள் அகலும். மேலும் அவனை அணுகச் சாத்தியமான பெரும் கஷ்டங்களை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள வும் இயலுமாகும். இவ்வாறு அவலங்கள் ஏற்படும் போது அவற்றைத் தாங்கிக் கொள்ளவும், அல்லது அவற்றைக் இலகு படுத்திக் கொள்ளவும், மேலும் அவை ஏற்படாது தடுத்துக் கொள்ளவும், தக்க மன வலிமையை அவன் பெறுவான்.


மனிதர்களிடமிருந்து உங்களை தொல்லைகள் வந்தடையும் போது, குறிப்பாக அவர்களின் வசை மொழிகள் உங்களைச் சீண்டும் போது நீங்கள் அதன் பால் கவணம் செலுத்தாமலும், உங்களின் உணர்ச்சிகளுக்கு இடம் தராமலும் இருப்பது பயன் மிக்கதாகும். அப்பொழுது அவர்களின் தொல்லைகள் உங்களுக்குக் கேடாக அமையாது, அவை அவர்களுக்கே கேடாக அமைந்து விடும்.


உங்களின் வாழ்க்கை, உங்களின் சிந்தனைகளின் தொடர்ச்சியாகும். எனவே உங்களின் சிந்தனைகள் மார்க்கம் அல்லது உலகம் சம்பந்தமான நலன் களுடன் தொடர்புபட்டிருப்பின், உங்களின் வாழ்வு சிறப்புற்று விளங்கும். அவ்வாறில்லை எனில் விளைவு எதிர் மாறானது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.


கவலைகள் நீங்க பயன் தரும் மற்றுமொரு வழி, தான் புரியும் நல்ல காரியத்திற்கு அல்லாஹ்வை யன்றி வேறு யாரிடமும் நன்றிக் கடனை எதிர்பாராமல் இருத்தல். எனவே எவருக்கேனும் உதவி உபகாரம் செய்யும் போது அதனை அல்லாஹ்வுக்காகச் செய்கின்றேன் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர உதவி பெற்றவனின் நன்றிக் கடனைப் பொருட்படுத்தக் கூடாது. இதுதான் அல்லாஹ்வின் சிறந்த அடியார்களின் பண்பாகும். இவர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:




'உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான். உங்களிட மிருந்து நாம் யாதொரு பிரதிபலனை அல்லது (நீங்கள்) நன்றி செலுத்து வதையோ நாங்கள் நாடவில்லை."(76/9)


தாங்கள் புரியும் உபகாரங்களுக்காக மனிதர் களிடம் பிரதி பலன் எதனையும் அல்லாஹ் வின் நல்லடியார்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதை இத் திருவசனம் எடுத்துக் கூறுகின்றது.


எனவே உங்களுடன் தொடர்புள்ள குடும்பம், பிள்ளைகள் மற்றும் பந்துக்கள் போன்ற அனைவர் களுடனும், அன்றாட நடவடிக்கைகளின் போது இதனைக் கருத்தில் கொள்வது அவசியம். மேலும் அவர்களிடமிருந்து உங்களுக்குத் தீமைகள் ஏற்படு கின்ற போது அவற்றை நீங்கள் புறக்கணித்து விடுவீர்களாயின் அதனால் உங்களுக்கு மன அமைதி உண்டாகும்.


பயன் தரும் கருமங்களை எப்பொழுதும் கண்களின் எதிரில் வைத்து, அதனை சாத்தியப் படுத்தும் காரியத்தில் ஈடுபடல் வேண்டும். தீமை பயக்கும் கருமங்களின் பக்கம் கவணம் செலுத்தக் கூடாது. இவ்வாறு துக்கம் துயரங்களை ஏற்படுத்தும் காரியங்களை செயலிழக்கச் செய்வதன் மூலமும், முக்கிய பணிகளில் மன அமைதியுடன் ஈடுபாடு கொள்வதன் மூலமும் உதவி பெறுவது அவசியம்.


பயன் தரும் இன்னொரு விடயம்தான் எல்லா காரியங்களையும் உரிய காலத்தில் செய்து முடித்து விட்டு,எதிர் கால வேலைகளுக்காக நேர காலத்தை ஒதுக்கிவைத்துக் கொள்ளல். அவ்வாறின்றி உரிய காலத்தில் வேலைகளைச் செய்து முடிக்காது போனால், முந்திய வேலைகளுடன் புதிய வேலைகளும் சேர்ந்து கடமை அதிகரித்து விடும். அப்பொழுது அதன் அழுத்தம் அதிகரித்து விடும். எனவே ஒவ்வோரு காரியத்தையும் உரிய காலத்தில் செய்து முடிப்பதன் மூலம் அடுத்து வரும் காரியங்களை நல்ல சிந்தனையுடனும், உறுதியாகவும் நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டும்.


நல்ல கருமங்களைத் தெரிவு செய்யும் வேளையில் மிக அவசியமான முக்கியமான காரியத்திற்கு முதலிடம் அளித்தல் வேண்டும். அதிலும் மனதுக்கு பிடித்தமான விடயத்தை இனங்காண்பது அவசியம். ஏனெனில் மனதுக்கு ஆர்வமில்லாத விடயத்தில் உள்ளம் ஈர்ப்புக் கொள்ளாது, அதனால் சோம்பலும், சலிப்பும் உண்டாகும். மேலும் அந்த காரியம் பற்றி நல்ல முறையில் சிந்திப்பதுடன், மற்றவர்களின் ஆலேசனையையும் உதவியும் பெறல் வேண்டும். ஏனெனில் யார் ஆலோசனை களைப் பெற்றுக் கொள்கின்றாரோ, அவர் கவலை அடைய மாட்டார். எனவே நீங்கள் செய்யப் போகும் காரியத்தைப் பற்றி ஆழமாக சிந்தியுங்கள்.


பின்னர் காரியத்தை செயல் படுத்த உறுதி கொண்டு விட்டீர்களாயின், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள்.


நிச்சயமாக தன் மீது நம்பிக்கை வைக்கின்ற வர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.


அல்ஹம்துலில்லாஹ் !

கருத்துகள்