“லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு"
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன் சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதர் நமது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
வருடம் தோரும் ரமழான் மாதம் வருகின்ற போது, லைலதுல் கத்ர் புனித இரவு பற்றிப் பரவலாகப் -பேசப்படுகிறது. அது பற்றி நினைவூட்டப்படுகிறது. ஏனெனில் இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்று கின்றது என்பது பெரும் பாண்மை முஸ்லிம் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். மேலும் இவ்விரவின் சிறப்புக் குறித்து அல்குர்ஆனில் ஒரு அத்தியாயம் அருளப் பட்டுள்ளதும், பல நபி மொழிகளில் அதன் சிறப்புக்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதும் இதற்குக் காரணமாக அமைகின்றன.
بسم الله الرحمنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلَهُ فِي لَيْلَةِ القَدرِ (٥) وَما أدرتك ما لَيْلَةُ الْقَدْرِ (0) لَيْلَةُ القَدرِ لَيْلَةُ القَدرِ شَهۡرٍ (٥) تَنَزَّلُ المَلائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِن كُلِّ أَمَّهِم مِن كُلِّ أَمَهِرٍ () مَطْلَعِ الْفَجْرِ (0)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹவின் திருப்பெயரால்
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவில் இறக்கி வைத்தோம்.
அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும் தங்கள் இறைவனின் கட்டளையின் இறங்குகின்றனர். பேரில் எல்லா காரியங்களுடன்
ஈடேற்றம் உண்டாகுக! அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும் (97; 1-5)
இப்படி இந்த இரவைப் பற்றி இந்த அத்தியாயம் சிலாகித்துக் கூறுகின்றது. மேலும் இந்த இரவின் கண்ணியம் குறித்துக் குறிப்பிடும் பல நபி மொழிகளில், சில ஏற்றுக் கொள்ளப் பட்டவையாகவும், இன்னும் சில மறுக்கத் தக்கனவாகவும் இருக்கின்றன.
பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர், (இன்னொரு அறிவிப்பின் படி நான்கு நபர்கள்) எந்தவொரு பாவ காரியத்திலும் ஈடுபடாமல் ஆயிரம் மாதங்கள் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். அது பற்றி தன் தோழர்களிடம் நபியவர்கள் ஒரு முறை குறிப்பிட்ட போது, தோழர்கள் வியப்படைந்தனர். அப்போது உங்களின் உம்மத்தினர் இதற்காக வியப்படைகின்றனரா? என்று அல்லாஹ் கூறினான். பின்னர் லைலதுல் கத்ர் என்ற இரவு அந்த ஆயிரம் மாதங்களை விட மேலானது என்று குறிப்பிட்டதுடன் juill என்ற அத்தியாயத்தையும் அவன் இறக்கினான். என நபி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, புனித இரவில் புரியும் நல் அமல்களுக்கு ஆயிரம் மாதங்கள் செய்த நல் அமல்களுக்குரிய கூலியை விட சிறந்த கூலி கிடைக்கும் என்பது இந்த நபி மொழியிலிருந்து புலனாகிறது.
இது இவ்வாறிருக்க இஸ்லாமிய சமுதாயம் ஒன்று பட்ட சமுதாயமாகத் திகழ வேண்டுமென்ற நோக்கில் ஹஸன் இப்னு அலீ (ரழி) அவர்கள் தன்னுடைய கிலாபத்தை முஆவியா (ரழி) அவர்களுக்கு விட்டுக்கொடுத்தார்கள். மேலும் அவர்களின் ஆட்சியை அங்கீகரித்து அவரிடம் பைஅத்தும் செய்து கொண்டார்கள். இதன் மூலம் பெரும்பாலும் இஸ்லாமிய உலகில் ஒற்றை ஆட்சி முறை ஒன்று நிலவ வழி ஏற்பட்டது.
எனினும் ஹஸன் (ரழி) அவர்களின் இந்த நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்த ஒருவர் அவரிடம் "நீங்கள் முஸ்லிம்களின் முகத்தில் கரி பூசிவிட்டீர்கள்" என்றார். அதற்கு அவர் "அல்லாஹ் உங்களின் மீது அருள் புரிவானாக. நீங்கள் என்னை குறை கூற வேண்டாம். ஏனெனில் நபியவர்கள் ஒரு முறை மிம்பரில் இருக்கும் போது, அவர்களுக்கு பனூ உமையாக்களின் அதிகாரம் காட்டப்பட்டது. அதை கண்டதும் நபியவர்களுக்கு வெறுப்புண்டானது. அப்போது அவரிடம் "உங்களுக்கு நாங்கள். ஹவ்ழுல் கௌஸரை தந்துள்ளோம்" என்ற செய்தியைத் தாங்கிய அல்கவ்ஸர் அத்தியாயத்தையும் மற்றும் அல்கத்ர் அத்தியாயத்தையும் அல்லாஹ் இறக்கியருளினான்." என்று ஹஸன் (ரழி) அவர்கள் கூறினார்கள்,
இதன் படி நபியவர்கள் மிம்பரில் இருக்கும் போது, உமையாக்களின் ஆட்சி தலை தூக்கும் என்ற செய்தியையும், அவர்களின் ஆட்சிக்காலம் ஆயிரம் மாதங்களைக் கொண்டது என்ற செய்தியையும்
ليلة القدر خير من ألف شهر .
லைலதுல் கத்ர் என்ற புனித இரவு ஆயிரம் மாதங்ளை விட சிறந்தது" என்ற வாசகம் அவர்களுக்குமுன்னறிவிப்புச் செய்கிறது. எனவே உமையாக்களின் ஆட்சி 'ஆயிரம் மாதங்ளை விட, அதாவது 83 வருடம் நான்கு மாதங்களை விட ஒரு நாளேனும் கூடவோ குறையவோ மாட்டாது,' என அவர்களின் ஆட்சியை இழிவு படுத்துவோர் கூறுவர். மேலும் அதனால் தான் உமையாக்களின் ஆட்சி, ஆயிரம் மாதங்களில் முடிவுற்றது என்றும் அவர்கள் கூறுவர். எனினும் இந்த சம்பவம் உண்மைக்குப் புறம்பானது
என்பதை ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள், "அல் கத்ர்" அத்தியாயத்தின் விரிவுரையில் விளக்கியுள்ளார்கள்.
முஆவியா (ரழி) அவர்களுக்கு ஹஸன் (ரழி) அவர்கள் தன்னுடைய ஆட்சியை ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டில் விட்டுக் கொடுத்தார்கள்.அப்போது ஸுபைர் (ரழி) அவர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்த மக்கா, மதீனா, அஹ்வாஸ் மற்றும் மேலும் சில ஊர்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் யாவும் முஆவியா (ரழி) அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு ஒற்றை ஆட்சி முறை அமுலுக்கு வந்த அவ்வாண்டு என அழைக்கப்பட்டது. அது முதல் ஹிஜ்ரி 132 வரை உமையாக்களின் ஆட்சி நிலவியது. பின்னர் ஹிஜ்ரி 132 அப்பாஸி பரம்பரையினர் ஆட்சியைக் கைப்பற்றினர். இதன் பிரகாரம் உமையாக்களின் ஆட்சிக் காலம் 92 வருடங்கள் ஆகின்றன. இது ஆயிரம் மாதங்களை விடவும் கூடியதாகும். ஆகையால் உமையாக்கள், ஆயிரம் மாதங்களை விட, அதாவது 83 வருடம் 4 மாதங்களை விட ஒரு நாளேனும் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆட்சி செய்ய மாட்டார்கள், அவர்களின் ஆட்சிக் காலம் 1000 மாதங்களே என்பதை வழியுறுத்தும் ஹதீஸ் ஆதரமற்றதாகும். மேலும் அல்கத்ர் அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதாகும். ஆனால் முன்னர் குறிப்பிட்ட மிம்பர் சம்பவம் மதீனாவில் நடைபெற்ற தாகும். இதன் படியும் இந்த ஹதீஸ் ஆதாரமற்றதாகும், என்பதை இப்னு கஸீர் (ரஹ்) தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் லைலதுல் கத்ர் இரவின் சிறப்பினைப் புகழ்ந்துரைக்கும் இந்த வாசகம் உமையாக்களின் ஆட்சியை இழிவு படுத்துமாறு அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!