الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஈருலக வெற்றிக்காகப் பற்றிப்பிடிக்க நினைப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், எந்த நோக்கத்திற்காக இந்த மனிதச் சமூகத்தை அல்லாஹ் 3 படைத்தான் என்று. நாம் படைக்கப்பட்ட ஒரே நோக்கம். இந்த வானங்களையும் பூமியையும் அதற்கிடையில் உள்ள அனைத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் யாருடைய துணையும் இல்லாமல் எந்த விதமான முன்மாதிரியும் இல்லாமல் தனித்தவனாக முதன் முறையாக படைத்த அல்லாஹ்வை வணங்குவது தான் ஆதமுடைய மக்கள் படைக்கப்பட்டு மண்ணில் வாழ்வதின் நோக்கமாகும்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்கே தவிர (வேறு எதற்கும்) அவர்களை நான் படைக்கவில்லை. (51:56)
அல்லாஹ்வை மட்டுமே வணங்குதல் என்ற உயரிய நோக்கத்தை மனித சமூகம் பூர்த்தி செய்யும் பொழுது மனித சமூகத்தின் மிகப்பெரிய எதிரியான ஷைத்தான் அதை அவ்வளவு எளிதாகச் செய்ய விடமாட்டான். அவன் மனித சமூகத்தை முன்பக்கத்தில் இருந்தும் பின்பக்கத்தில் இருந்தும் மனிதர்களை வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விற்கு முன்னால் உறுதிமொழி எடுத்துவிட்டு வந்திருக்கின்றான்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதகுலத்தை வழிகெடுப்பதற்காக அவன் புதுப்புது வழிமுறைகளை கையாண்டு கொண்டிருக்கின்றான்.
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ ثُمَّ لآتِّيَنْيُمَّ لآتِيَنَّ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ
أَيْمَانِهِمْ وَعَن شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
(அதற்கு இப்லீஸ்) "நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி)விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்துகொள்வேன்" என்று கூறினான். "பிறகு, அவர்களுக்கு முன்புறத்திலிருந்தும், அவர்களுக்குப் பின்புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்" (என்றும் கூறினான்). (7:16,17)
மனிதகுலம் ஷைத்தானுடைய சூழ்ச்சியில் சிக்கி தன்னுடைய பாதையை மறந்து தான் படைக்கப்பட்ட நோக்கத்தை மறந்து பாவத்திலும் இணைவைப்பிலும் நிராகரிப்பிலும் மூழ்கிக் கிடக்கும் பொழுது அல்லாஹ் இறைத்தூதர்களை, நபிமார்களை அனுப்பி இந்த மனிதர்களுக்கு தான் படைக்கப்பட்ட நோக்கத்தை நினைவூட்டுகிறான்.
அந்த நினைவூட்டலின் அடிப்படை, உலகத்தில் ஆட்சி அதிகாரங்களைப் பிடிப்பதோ அல்லது செல்வங்களைக் குவிப்பது அல்லது இந்த மனிதகுலம் மனோஇச்சையின் அடிப்படையில் நிம்மதியாக இருப்பதற்குத் தேவையான எந்த வசதிகளையும் பெறுவது அல்ல. மாறாக, அவர்கள் எல்லோரும் இந்த மனிதகுலத்திற்கு முதலாவதாக நினைவூட்டியது. அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனைத் தவிர மற்ற படைப்புக்களை வணங்கக் கூடாது என்பதுதான். ஷைத்தானுடைய சூழ்ச்சிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்பதுதான். எந்த ஒரு இறைத்தூதரும் தன்னுடைய அழைப்புப்பணியை முதலில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் துவக்கவில்லை அல்லது ஆட்சியாளர்களிடம் தன்னுடைய உரிமைக்காக கெஞ்சிக்கொண்டு இருக்கவில்லை. மாறாக, அனைத்து தாகூத்துகளையும் விட்டும் ஒதுங்கி அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற அழைப்புப்பணியை நிறுவினார்கள்.
மற்றும் هَدَى اللَّهُ وَمِنْهُم مِّنْ حقَّتْ عَلَيْهِ الضَّلالَة فسيروا في الأرضِ فَانظُرُوا كَاُبَكَ الْمُكَذِّبِينَ
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூத்துகளை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே, அந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடு விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (16:36)
தாகூத்துகள் என்றால் யார்? அல்லாஹ்விற்கு இணையாக வணங்கப்படுதல். அல்லாஹ்வை வணங்குவதை போன்று தானும் வணங்கப்பட வேண்டும் என்று விரும்புபவர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விதித்த வரம்பை மீறுவதை நோக்கி அழைப்பவர்.
இப்படிப்பட்ட தன்மையை உடைய மனித ஜின் ஷைத்தான்களாகிய தாகூத்துகளை விட்டும் ஒதுங்கி அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். மேலும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்களுக்குத் கொடுக்கப்பட்ட ஷரீஅத்தை கொண்டு உயிர்ப்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக அவருடைய சமூகத்தை வளர்த்தெடுத்தார்கள். அல்லாஹ் سُبْحَانَهُ وَتَعَالَى அவர்களுடைய மனத்தூய்மையான கீழ்ப்படிதல், தியாகங்கள். அர்ப்பணிப்புகள் மற்றும் உண்மைத்தன்மைகளைப் பார்த்து அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய வெகுமதிகளில் ஒரு வெகுமதிதான் ஆட்சி அதிகாரமாகும். ஆனால், அந்த நபிமார்களுடைய நோக்கம் ஆட்சி அதிகாரம் இல்லை. அவர்களுடைய கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தாலும் ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும் அல்லாஹ் 1510 ஹலால் ஆக்கியவைகளை ஹலால் ஆக்கினார்கள். அல்லாஹ் 15,130 ஹராமாக்கியவைகளை ஹராம் ஆக்கினார்கள்.
இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தில் பல பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். மிகப் பெரிய அழிவையும் மிகப் பெரிய இழிவையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒவ்வொரு நோயின் ஆணிவேர் ஒன்றுதான். அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்துதான் அது இந்த மனித சமூகம் அல்லாஹ் வை மட்டுமே வணங்க வேண்டும். தாகூத்துகளை விட்டும் ஒதுங்க வேண்டும்."
முஸ்லிம் சமூகத்தின் மீட்சிக்கு வழி இது ஒன்றுதான். வேறு மாற்று வழியோ அல்லது குறுக்கு வழியோ கிடையாது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனால் படைக்கப்பட்ட எந்த ஒன்றையும் வணங்கக் கூடாது. முன்னோர்களை வழிபடக் கூடாது. அதாவது, மரியாதை அல்லது நினைவு கூருகிறோம் என்ற பெயரால் அல்லாஹ் எதை இபாதத்து என்று சொன்னானோ அதை இறந்துவிட்ட முன்னோர்களுக்கோ அல்லது உயிரோடு இருக்கின்ற தலைவர்களுக்கோ செய்யக் கூடாது. நீதியாளனான அல்லாஹ் tam தந்த மார்க்கம் முழுவதும் நீதியானது. அதில் எந்த உயிர்க்கும் அவன் அநீதி இழைக்கவில்லை. அது எல்லாக் காலத்திலும், எல்லா உயிர்களுக்கும் ஆனது என்ற நல் எண்ணத்துடன் வாழ வேண்டும். அல்லாஹ் தந்த மார்க்கத்தில் எந்த அம்சத்தையும் வெறுக்கக் கூடாது.
மனித சமூகம் தன்னுடைய பாவங்களை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அல்லாஹ் Jou கொடுங்கோன்மை ஆட்சியாளர்கள், வறுமை, அச்சம், இன்ன பிற சோதனையைக் கொடுக்கிறான். முஸ்லிம்களாகிய நாம் இதை உணர்ந்து அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டுமே தவிர, இந்த உலகை படைத்த படைப்பாளன் ஒருவன் இல்லை என்பதை நிறுவும் நோக்கில் உருவாக்கப்பட்ட பொருளியல் கோட்பாடுகளில் இதற்கான தீர்வை தேடிக்கொண்டு இருக்கக் கூடாது.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصِ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர்
நன்மாராயங் கூறுவீராக! (2:155.).
மற்றும்
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பிவிடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம். (32:21)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! உங்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்காக அரசியல் மேடையில் நின்று ஆட்சியாளர்களை பழிப்பதை நிறுத்துங்கள். இது மிகவும் தவறான வழிமுறையாகும். இந்த வழிமுறையை இஸ்லாமியச் சட்டத்தின் மூலம் மட்டுமல்ல, வேறு எந்தச் சட்டத்தின் மூலமும் நியாயப்படுத்த முடியாது. ஆட்சியாளர்களை நெருங்கி அறிவுரை சொல்ல பல்துறை சார்ந்த அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுரைகளை கேட்காமல் ஆட்சியாளர்கள் முடிவெடுத்து செயல்படுத்த நாடினால் நாம் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிட வேண்டும். அல்லாஹ் 5 சோதனையைப் பற்றிக் கூறும்பொழுதெல்லாம் அவனிடம் உதவிதேடிக் கொண்டு அழகிய பொறுமையை மேற்கொள்ள சொல்லுகிறானே தவிர கிளர்ந்து எழுங்கள். போராடுங்கள் என்று கூறவில்லை. ஆட்சியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு அழகிய முறையில் அறிவுரை சொல்லுங்கள். ஒரு
ஒவ்வொரு கூட்டமும் நாங்கள் ஆட்சியாளர்களை திருத்தப் போகிறோம் என்று கிளம்பினால் இந்த நிலமெல்லாம் குருதி ஆகும். கெடுதலுக்கு மேல் கெடுதலும் அழிவும் மட்டுமே மிஞ்சும். நிச்சயமாக அவர்களுடைய செயல்களுக்கு அவர்கள் பொறுப்பு. உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பு.
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّتَّنَ تَشَُاء تَشَاء وَتُذِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவுபடுத்துகிறாய்; நன்மை உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ எல்லாப் பொருளின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)
قالَ رَسُول الله صلى الله عليه وسلم : يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ العَمَلُ، وَيُلْقَى الشَتَّحُ وَيُلْقَى الشَّحُ وَيَكْثُرُ الهَرْجُ قَالُوا: يَا رَسُولَ اللهُ: مَا هُوَ؟ قَالَ: الْقَتْلُ الْقَتْلُ
அபூ ஹுரைரா அறிவித்தார்: நபி அவர்கள் '(மறுமைநாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். صلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ها அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் அல்- புகாரீ 6037)
ஒவ்வோர் அரசியல் கட்சியினுடைய மற்றும் இயக்கங்களினுடைய வளர்ச்சிக்காக பல அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் சேர்த்த செல்வங்கள் அப்பாவி ஏழை எளிய மக்களின் உடலில், உழைப்பில் இருந்து சுரண்டப்பட்டது ஆகும். ஏழை எளிய மக்களின் இரத்தக் கறைகள் நம் கைகளில் படாமல் பார்த்துக் கொள்ளுவதற்கான வழிமுறை அரசியலை விட்டும் ஒதுங்குவது ஆகும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு நடக்காது என்பதை ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நமக்கு பாதுகாப்பு என நாம் கருதுகிறோமோ. அந்தக் கட்சியின் மூலமாகவே இந்தச் சமுதாயம் துன்பத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், எந்தக் கட்சி வந்தால் ஆபத்து என நாம் கருதுகிறோமோ, அவர்களின் மூலமாகவே ஒரு பாதுகாப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அனைத்திற்கும் அல்லாஹ்வின் நாட்டம் என்று ஒன்று உள்ளது. அவன் நம் சமுதாயத்திற்கு நாடாத ஒன்றினை எக்காலத்திலும் படைப்பினங்கள் நாடி அதனைக் கொடுத்துவிட முடியாது. நம்முடைய தவக்குளை முழுமையாக அல்லாஹ்வின் மேல் வைக்க வேண்டும்.
قل أن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ الله لَنَا هُوَ مَوْلانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَنَّلْ
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (9:51)
எப்பொழுது நம் தவக்குள் உண்மையான தவக்குளாக அமையுமோ, எப்பொழுது அல்லாஹ் வை பற்றிய சரியான கல்வி அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் புகட்டப்படுமோ, அப்பொழுது மனித சமூகம் அல்லாஹ்வின் பெரும் வல்லமையை உணர்ந்து அவனை மட்டுமே வணங்க ஆரம்பிக்கும்; அவன் பக்கம் திரும்ப ஆரம்பிக்கும்: அவனிடம் உதவி தேட ஆரம்பிக்கும். அவனையே முழுவதும் சார்ந்து நிற்கும். இப்படி உண்மையான தவக்குளோடு சீர்திருந்திய சமூகத்துக்கு அல்லாஹுவுடைய அருட்கொடையாக மக்கள் மீது இரக்கம் காட்டக்கூடிய நல்ல ஆட்சியாளர்கள் அமைவார்கள்.
عَنْ مَنْصُور بن أبي الأسود رحمه الله قال سألت الأَعْمَشِ عَنْ قَوْله تَعَالَى وَكَذلِكَ نُولَى الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ ما سمعتهم يقولُونَ فيه قال سمعتهُمْ يَقَولُونَ النَّاسُ أَمْرَ عَلَيْهِم شرارهم
மன்சூர் இப்னு அபி-அல் அஸ்வத் அவர்கள் அறிவிக்கின்றார்கள் "நான் அல்-அஃமஷ் رحمه الله அவர்களிடம் அல்லாஹ் சிகிவுடைய இக்கூற்றைப் பற்றி கேட்டேன்.
"இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருக்கு அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (கெட்ட) செயல்களின் காரணமாக நாம் சேர்த்து (தோழர்களாக்கியு)ம் விடுவோம்." (6:129)
இந்த ஆயத்தை பற்றி நீங்கள் என்ன கேள்விபட்டீர்கள் கேட்டேன். அதற்கு அல்-அஃமஷ் அவர்கள் என்று கூறினார்கள் "மக்கள் (பாவங்கள் செய்து) கெட்டவர்களாக இருந்தால், அநியாயக்காரர்கள் அவர்கள் மீது ஆட்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்". தஃப்ஸீர் அஸ்-ஸுயூதி
இமாம் இப்னுல் கைய்யும் Aas அவர்கள் கூறுகிறார்கள்:
அடியார்களுடைய செயல்பாடுகளுக்கு ஏற்பவே அவர்களுடைய அரசர்களும், அவர்களுடைய தலைவர்களும், அவர்களுடைய ஆட்சியாளர்களும் இருபார்கள் என்பது அல்லாஹ் தன்னுடைய ஞானத்தின் அடிப்படையில் முடிவு செய்ததாகும். நிச்சயமாக அவர்கள் (அடியார்கள்) உறுதியாக (நல்லவர்களாக) இருந்தால் அரசர்களும் உறுதியாக (நல்லவர்களாக) இருப்பார்கள். (அடியார்கள்) நீதியாக நடந்து கொண்டால் அவர்களும் (ஆட்சியாளர்களும்) நீதியாக நடந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் (அடியார்கள்) [தங்களையும் பிறரையும்] ஒடுக்கினால், அவர்களுடைய அரசர்களும் ஆட்சியாளர்களும் (அவர்களை] ஒடுக்குவார்கள், மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَفَن يُطِعِ اللَّهَ وَرَسَولَهُ فَوْزًا عَظِيمًا
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். (31:71)
இதற்கு மாற்றாக, குறுகிய சிந்தனை உடைய, மார்க்கத்தைச் சரியாகக் கற்காத ஒரு கூட்டம் கூறுகிறது, அரசியல்தான் இன்றைய காலத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு, அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமாகத்தான் நாம் நம்முடைய இஸ்லாமிய உரிமைகளை இந்த மண்ணில் நிம்மதியாக நிலைநாட்ட முடியும். இதனை மையமாக வைத்து இன்று அழைப்புப்பணி செய்யப்படுகிறது. இஸ்லாமிய அரசியல் என்றும் இஸ்லாமிய ஆட்சி முறை என்றும் இஸ்லாமிய பொருளாதாரம் என்றும் இப்படி பலப்பல வகைகளில் இன்றைக்கு மக்கள் அழைக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இந்த அழைப்புப்பணிக்கான முன்மாதிரியை இவர்கள் யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? நபிமார்களிடம் இருந்தா அல்லது சஹாபாக்களிடம் இருந்தா அல்லது தாபிஈன்கள் இடம் இருந்தா அல்லது தபஅத்தாபியீன்கள் இடம் இருந்தா, இவர்கள் யாரிடமிருந்தும் இல்லை. மக்களுடைய கவனத்தை பெறுவதற்காக இவர்களுடைய பெயர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெற்ற இப்படிப்பட்ட நல்லடியார்களிடம் இருந்து அவர்களுடைய முன்மாதிரியை எடுக்கவில்லை. மாறாக இஸ்லாமிய அரசியல், இஸ்லாம் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். இந்த அரசியல் என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை மக்களாட்சி ஆகும். ஜனநாயகம் என்பது மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை ஹலால் ஆக்குவது அல்லது மக்கள் எதை வெறுக்கிறார்களோ அதை ஹராமாக்குவது ஆகும்.
இப்படிப்பட்ட அரசியலில் அல்லாஹுடைய திருப்தியை மறந்து பெரும்பான்மையான மக்களை திருப்திப்படுத்துவதற்காக இவர்கள் சட்டமாக இயற்றி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களாட்சி முறையை தான் இவர்கள் இஸ்லாமிய அரசியல் என்று கூறுகிறார்கள். இன்றைக்கு இந்த மக்களாட்சி நடக்கக்கூடிய உலகத்தின் எந்த ஒரு நாட்டை எடுத்துப் பார்த்தாலும் அங்கு மது, சூது விபச்சாரம், ஓரினச்சேர்க்கை இன்னும் அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்து பாவங்களும் சட்டபூர்வமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
இப்படிப்பட்ட அபாயகரமான பாவங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் எந்த ஒரு அரசியல்வாதியும் மக்கள் ஆட்சியை நிறுவ முடியாது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு ஆட்சி முறைக்கு தான் இஸ்லாமை பக்கத்தில் சேர்த்துக் கொண்டு இஸ்லாமியப் பொருளாதாரம், இஸ்லாமியத் தொலைநோக்குப் பார்வை என்று இவர்கள் பல பெயர்களைச் சூட்டி மக்களை மயக்க பார்க்கின்றார்கள்.
Democracy, socialism, ឈប់ សំល இஸ்லாமுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டவைகள், கடவுள் மறுப்பு கொள்கையின்பால் அழைக்கக்கூடியவை. அது எப்படி இஸ்லாமோடு சேர முடியும். Socialism, democracy போன்ற கோட்பாடுகளுக்காகச் செலவழிக்கப்பட்ட நேரத்திற்கும் பொருளுக்கும் அல்லாஹுவிடம் எப்படி நாம் நன்மையை எதிர்பார்க்க முடியும்? அப்படி எதிர்பார்ப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்?
இவர்களெல்லாம் ஷைத்தானுடைய படைகள். சகோதரர்களே, நமக்கு அல்லாஹ் முல்ட கொடுத்து இருக்கின்ற இந்த வாழ்க்கை மிகச் சொற்பமானது மிகக்குறுகியது. அல்லாஹ் Jum அருட்கொடையாக வழங்கிய நேரத்தையும் காலத்தையும் இப்படிப்பட்ட சுயநலமிக்க, தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அதிகாரங்களுக்காக போட்டி போடும் குழுக்களுக்கு பின்னால் நாம் செலவழித்து நம்முடைய போட்டுக்கொள்ள கூடாது. கைகளை ஈருலக நாசத்தில் அழிவிலும்
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக்கொள்ளாதவர்களை, நீங்கள் அவர்கள் விரும்புவது போல் நடந்து திருப்திப்படுத்த முடியாது. எதுவரை என்று சொன்னால் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை. அவர்களிடம் நற்பெயர் எடுப்பதற்கு நீங்கள் இஸ்லாமை எந்த அளவிற்கு சமரசம் செய்துகொள்வீர்கள் என்றால் கடைசியில் நீங்கள் முற்றிலுமாக இஸ்லாமை இழந்து மிகப்பெரிய நஷ்டத்தை இந்த உலகிலும் மறுமையிலும் சந்திப்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.
وَلَن تَرۡضَى عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَتَهُمْ قُلْ إِنْ هُّدَى மற்றும் نَصِيرٍ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (2:120)
அல்லாஹ் J எந்த நோக்கத்திற்காக நம்மை படைத்தானோ அந்த நோக்கத்தை பூர்த்தி செய்தோம் என்றால் அல்லாஹ் பில்லினய்வின் உதவியும் பாதுகாப்பும் எப்படிப்பட்ட எதிரிகளுக்கு இடையில் வாழ்ந்தாலும் இப்ராஹிம் PESITE மூஸா عَلَيْهَا السَّلَامُ ஆகியோருக்குக் கிடைத்தது போல் நமக்குக் கிடைக்கும். நாம் இஸ்லாமிய அரசியல், இஸ்லாம் என்ற வார்த்தையைப் பின்னால் சேர்த்துக்கொண்டு பாவகரமான வழிகேடான செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பின்னால் கூட்டமாக, அணியாகத் திரள்வோமாயின், இந்த உலகத்தில் நமக்குப் பாதுகாப்புக் கிடைக்காது. மறுமையிலும் அல்லாஹ் வின் முன்னால் மிகப் பெரிய நஷ்டவாளி ஆகுவோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அதில் அல்லாஹ் ஒலி நம்மை உறுதியாக்கட்டும்.
قُلْ آمَنْتُ بِاللَّهِ ثُمَّ اسْتَقِمْ
சொல்லுங்கள்: அல்லாஹ்வை ஈமான் கொண்டேன்; அதில் உறுதியாக நிற்பேன். மிஷ்காத் அல்-மஸாபீஹ் 15. இமாம் அல்பானி ய்ய அவர்கள் இதனை ஆதாரப்பூர்வமானது என்று ஜாமிஃ அஸ்-ஸகீர் 7845ல் பதிவு செய்துள்ளார்கள்.
இரண்டு தீமைகளில் குறைந்ததைத் தேர்ந்தெடுக்கிறோம் என்ற அடிப்படையில் தேர்தல்களில் பங்கேற்கலாமா ?
கேள்வி : அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் சிலர், அமெரிக்காவில்
இமாம் அல்பானி அவர்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது. நடக்கும் தேர்தல்களில் பங்கேற்கின்றனர் அதன் சட்டம் என்ன? அவர்கள் அதற்கு 'இரண்டு தீமைகளில் குறைந்ததை தேர்ந்தெடுப்பது' என்ற அடிப்படையை ஆதாரமாக காட்டுகின்றனர். போடும் வேட்பாளர்களில் எவரேனும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக உண்டாகும் என்கிறார்கள். ஆட்சிக்குப் போட்டிப் ஒருவர் வென்றால், குறைந்தபட்ச தீமையே
الحمد لله رب العالمين والصلاه والسلام على شرف الانبياء والمرسلين وعلى اله واصحابه : 1
اجمعين اما بعد
'இறைமறுப்பாளர்கள் அனைவரும் ஒரே ஒரு சமூகத்தினரே ஆவர்: இரண்டு தீமைகளில் குறைந்ததை தேர்ந்தெடுக்கிறோம் என்று கூறும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஒலி நினைவூட்டுகின்றான்.
وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصْرِى حَتَّى تَتَّبِعَ مِلتَهُم
(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (2:120)
எனவே உங்களுடைய கேள்வியில் கூறியது போன்று இவ்வாறான ஏமாற்றமான சிந்தனைகைளை நம்பிக்கையாக சுமந்துள்ள இளைஞர்களைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அல்லாஹ் ஒலி உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்
மற்றும் ثُمَّ لَا تُنصَرُونَ
இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சிறிதும் சாய்ந்துவிடாதீர்கள். அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! மேலும் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது. (11:113)
மறுமை நாளின் நெருப்பு தீண்டுவதற்கு முன் இவ்வுலகில் நெருப்பு தீண்டும். இதனால்தான் நாம் தேர்தல்களில் பங்கேற்பது அனுமதிக்கப்பட்டதல்ல என்று கூறுகின்றோம். ஏனென்றால் (தேர்தல்களில்) பங்கேற்பது என்பது உங்களுடைய செயல்களினால் இறைமறுப்பாளர்களை தோழர்களாக எடுப்பதாகும். இது அல்குர்ஆனின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதல்ல
2 وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பர்களாக (பாதுகாவலர்களாக) ஆக்கிக் கொண்டால், நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (5:51)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ் பில் கூறுகின்றான்
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَكَ اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمۡ ارْتَضَى لَهُمْ خَوۡفِهِمۡ أَمۡنًا يَعۡبُدُونَنِي لَا يُشْرِكُونَ فِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْئِدَ ذَلِكَ الْفَاسِقُونَ
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் உண்மையாகவே ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன்றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர் (உங்களில்) எவர் நிராகரிப்பவராகிவிட்டாரோ நிச்சயமாக
அவர்கள்தாம் (அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காத) பாவிகள். (24:55)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஷெய்க் அல்பானி,
ஷெய்க் இப்னு பாஸ், ஷெய்க் ஸாலிஹ் அல்-உசைமின் போன்றவர்கள் உயிரோடு இருந்தபோது இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் பற்றி அவர்கள் அறியாதவர்களல்ல. ஆனாலும் அவர்கள் இந்தியாவில் நடக்கும் தேர்தலில் பங்கேற்பது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்று அவர்கள் தீர்ப்பு கொடுத்ததில்லை. ஆனால் இன்றைக்கு அந்த மதிப்பிற்குறிய உலமாக்கள் சில குறிப்பிட்ட அரபு நாடுகளுக்கு கொடுத்த பத்வாவை வைத்து, இன்றைக்கு இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சி தேர்தல்களில் ஒத்துழைப்பு கொடுப்பது அனுமதிக்கப்பட்டது என்கின்றனர். மேலும் அந்த உலமாக்களின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நான் சொல்லியதில் சத்தியம் இருந்தால் அல்லாஹ் எனக்கு தந்த அருள்களாகும். நான் சொல்லியதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது என் புறத்திலிருந்தும் ஷைத்தான் புறத்திலிருந்தும் வந்தவையாகும். அல்லாஹ் நம் அனைவரையும் சத்தியத்தை பின்பற்றுபவர்களாகவும், அசத்தியத்தை தவிர்ந்து கொள்பவர்களாகவும் ஆக்கட்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அல்லாஹ்வை புகழ்ந்தும், இறுதி நபி முஹம்மது அவர்கள்
மீது ஸலாமும் ஸலவாத்தும் கூறி எழுதுவது அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி பின் முஹம்மது நூபார் பின் உஸ்மான் பின் நூஹ் லப்பை ஆல மரிக்கார் அ ஸைவானி அல் யமனி அஸ் ஸலஃபி அல் அஸரி.
source: https://t.me/ahlulhadith_in
முஸ்லிம்களும் �அரசியலும்
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!