''வறியவன் பஞ்சைப்பராரியாக ஆகிவிடாதீர்கள் ! [ஜாக்கிரதை] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
''வறியவன் பஞ்சைப்பராரியாக ஆகிவிடாதீர்கள் ! [ஜாக்கிரதை] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 31, 2020

வாழ்வாதாரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இந்த உலகத்தில் வாழ , ஒரு இருப்பிடம், உணவு, உடை , தண்ணீர் இவைகள் போதும்! இவைகளில் ரொம்ப முக்கியமானவை உணவும், தண்ணீரும் தான்! மற்ற இரண்டும் இல்லாவிட்டால் சிரமம் தான், ஆனால் சமாளித்து கொள்ளலாம்... ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவும், தண்ணீரும்தான் இந்த இரண்டும் இல்லை என்றால் , நிச்சயமாக மனிதன் உயிர் வாழமுடியாது! 

இந்த உலகத்தில் பெரும்பாலும் மக்கள்கள் வறுமையிலும் , கஷ்டத்திலும் தான் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை! அந்த வறுமையை போக்க , கஷ்டத்தை நீக்க அந்த நாட்டின் ஆட்சியாளர் தான் பொறுப்பாளியாக இருக்கிறார் ! ஆனால், அங்கே என்ன நடக்கிறது ? சாமானிய மக்கள்களுக்கு நன்மையை நாடாமல், ஒரு சிலருக்காக மட்டும் நன்மையை நாடக்கூடிய ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் , ஆகையால் அங்கே ஒரு பக்கம் அநீதி நடக்கிறது. ஒரு நாட்டில் , அங்கே பல மதத்தினர்கள் இருந்தபோதிலும் , ஆட்சி செய்யக்கூடியவர்கள் எல்லோருக்கும் சமமாக , நேர்மையாக, சமத்துவமாக நடக்க வேண்டும், மாறாக நிச்சயமாக அங்கே நிறைய குழப்பங்கள், அநீதிகள் , அநியாயங்கள், நேர்மையன்றி ஆட்சி நடப்பதற்கான நிறைய சாத்தியங்கள் இருக்கிறது! 

வியாழன், பிப்ரவரி 25, 2016

''வறியவன் பஞ்சைப்பராரியாக ஆகிவிடாதீர்கள் ! [ஜாக்கிரதை]

''வறியவன் பஞ்சைப்பராரியாக ஆகிவிடாதீர்கள் ! [ஜாக்கிரதை]
அல்லாஹ்வின் திருபெயரால் ..................
ஓட்டியாண்டிக் கேள்விப்பட்டீர்ப்பீர்கள் ''வறியவன் '' அதாவது பஞ்சைப்பராரி .
மறுமையில் அல்லாஹ்  நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்!

அண்ணல் நபி[ஸல்] அவர்கள் ''வறியவன் [பஞ்சைப்பாராரி] என்பவன் யார்? என்று வினவினார்கள். மக்கள், ''எவரிடம் திர்ஹமோ [வெள்ளி நாணயமோ] வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார்'' என்று கூறினர் . அண்ணலார் பதிலளித்தார்கள்..  ''ஒருவன் மறுமைநாளில் தன்  தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும்  திட்டியிருப்பான்,, எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான்,, எவரேனும் ஒருவரின் செல்வத்தை பறித்துத் தின்றிருப்பான்,, எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான்,, எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின்  உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தாலும் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் பஞ்சைப்பராரி ஆவர் .