தவ்பாச் செய்து மீளுதல் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவ்பாச் செய்து மீளுதல் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

தவ்பாச் செய்து மீளுதல் ...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தவ்பாச்  செய்து மீளுதல் ...

அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவ்பா - பாவமீட்சி பெறுவது அவசியமாகும் என மார்க்க மேதைகள் கூறுகிறார்கள்.

மனிதர்களின் உரிமைகள் சம்மந்தப்படாது, அல்லாஹு தஆலாவின்  கட்டளைகள் விஷயத்தில் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் , அவர் அதனை விட்டுத் தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும் மூன்று நிபந்தனைகள் உள்ளன. 1] தாம் இதுவரை செய்து வந்த பாவத்தைவிட்டு முற்றிலும் நீங்கி விடுவது [2] தமது பாவம் குறித்து உண்மையில் வருந்திக் கைசேதமுறுவது [3] இனிமேல் எப்பொழுதும் அப்பாவத்தைச் செய்வதில்லை என உறுதி பூணுவது.