அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 23, 2020

இறைவனிடம் கையேந்துங்கள்!


இறைவனிடம் கையேந்துங்கள்!
பிரார்த்தனையின் ஒழுங்குகள்

இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும்,பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.

சனி, மே 23, 2015

பர்மா முஸ்லிம்கள் ........???

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்............
அல்லாஹ் கூறுகின்றான்...

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா ? அவர்களை [வறுமை, பிணி போன்ற] கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன,, ''அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ,,  ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது''  [என்று நாம் ஆறுதல் கூறினோம்]
அல்குர் ஆன் .. அத் 2 /வசனம் 214/பகுதி 2

செவ்வாய், ஜனவரி 27, 2015

சீமான் ஆக்கிய ஈமான் [தொடர்ச்சி ]

சீமான் ஆக்கிய ஈமான் [தொடர்ச்சி ]
அல்லாஹ்வின் திருபெயரால் ...........

ஒருவரின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது ''சோம்பேறி '' முயற்சி நம்முடையது வெற்றியை கொடுப்பது இறைவனுடையது ! 

ஹசன் பாய் அல்லாஹ்வின் கிருபையால் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே போகிறார்... அடுத்த ஓராண்டில் பேங்கு லோன் போட்டு  'சீதேவி ' பழமுதிர் சோலை , அதுவும் நல்ல இடத்தில் திறந்தார். கல்லா நிரம்பி வழிந்துக் கொண்டேயிருந்தது . அடுத்த லாபகரமான தொழில் ஒன்றை யோசித்தார். அவருக்கு நினைவுக்கு வந்தது டீ ஸ்டால் . டவுனில் நாலைந்து இடங்களில் டீ ஸ்டால் ஆரம்பித்தார்.

ஞாயிறு, ஜனவரி 25, 2015

சீமான் ஆக்கிய ஈமான்

அல்லாஹ்வின் திருபெயரால் .......

இந்த கட்டுரை நமக்கு ஒரு பாடத்தை தருகின்றன. எதுவேண்டுமானாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள் , அவன் இருகரத்தை விரித்தவன்னமாக இருக்கின்றான் . அவன் தான் எல்லோருக்கும் உணவளிப்பவன் !


ஹசன் பாய் மிகப் பெரிய பணக்காரர் . தக்காளி கமிஷன் மண்டி, பழ கமிஷன் மண்டி , பழமுதிர்சோலை , ஆங்காங்கே டீ ஸ்டால்கள் என்று வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.  'ஹசன் பாயா? தங்கமான மனிதர்.  இல்லேன்னு உதவி தேடி போனால் போதும் . ஆயிரம் ரூபாய் எடுத்து தந்துடுவாரு . தொழுகையாளி , தீன்தாரி / மார்க்கெட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு தலைவர்'  இப்படி ஹசன் பாயை பற்றி மக்கள் அடுக்கிக் கொண்டே போவார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஹசன் பாய் நன்றி மறக்காத மனிதர் என்பதுதான் உண்மை.

ஞாயிறு, மே 11, 2014

இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

[நபியே] என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், ''[இதோ] நான் அருகிலேயே இருக்கிறேன்,, அழைப்பவர் , என்னை அழைக்கும்போது அவரது அழைப்பை நான் ஏற்கிறேன்'' [என்று கூறுவீராக] . ஆகவே , அவர்கள் என் அழைப்பை ஏற்கட்டும்,, என்னை நம்பட்டும். [இதன் மூலம்] அவர்கள் நேரிய வழியைப் பெறக்கூடும்.

ஞாயிறு, மார்ச் 23, 2014

பாக்கியம் தரும் பாவமன்னிப்பு

அல்லாஹ்வின் திருபெயரால்.....
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

''விசுவாசிகளே ! நீங்கள் கலப்பற்ற மனதுடன் [பாவத்திலிருந்து விலகி] அல்லாஹ்வின்பால் திரும்புங்கள்''
அல்குர் ஆன் ..66..8]

செவ்வாய், ஜூன் 25, 2013

அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!


அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப் பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற் காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 2:186)

உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப் பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன். நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர் களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)