நம் துன்பங்களுக்கு நாமே காரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம் துன்பங்களுக்கு நாமே காரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 13, 2016

நம் துன்பங்களுக்கு நாமே காரணம்

நம் துன்பங்களுக்கு நாமே காரணம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நாமைடையும்  துன்பங்களுக்கும்,துயரங்களுக்கும், தொல்லைகளுக்கும், வறுமைக்கும் நாமே காரணமாய் உள்ளோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அருளே வடிவான அல்லாஹ் நல்லடியார்களைத் தண்டிப்பானா? ஒரு பாவமுமறியாத அப்பாவிகளை அவன் துன்புறுத்துவானா? மார்க்கக்க  கடமைகளைத் தவறாது நிறைவேற்றும் உண்மையாளர்களை அவன் தொல்லைப்படுத்துவானா? என்று ஒவ்வொருவரும் சிந்திப்பது அவசியம்.

''அவ்வாறெனில் நாம் சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கிறோமே ! முயற்சிகள் அனைத்தும் துண்டாகிப் போகின்றனவே! எச்செயலும் முழுமை பெறுவதோ அல்லது வெற்றி பெறுவதோ இல்லையே!  தோல்வி... தோல்வி... தோல்வி. வாணிபத்தில் நாட்டம். அதிகாரிகளின் தொல்லை. காவல் துறையினர் பாடுபடுத்துகின்றனர். எந்நேரமும் மனைவியிடம் சச்சரவு! வாழ்க்கையில் நிம்மதி இல்லை.'' இவை அனைத்திற்கும் காரணம் என்ன?