குறைவாக இருப்பினும் நிரந்தரம் தேவை !
ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே செய்து வாருங்கள்.. ஏனெனில் நற்கூலி தருவதில் அல்லாஹ் தளர்வதில்லை ! ஆனால் நீங்கள் நல்ல செயல்கள் புரிந்து, புரிந்து தளர்வடைந்து விடுவீர்கள் ! [கொஞ்சமாக இருந்தாலும் ] நிரந்தரமாகச் செய்து வருவதையே அல்லாஹ் விரும்புகிறான் -அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரியே!
ஆதாரம்.. புகாரி , முஸ்லீம், திர்மிதி, நஸயீ இப்னு மாஜா மற்றும் அபூதாவூத் ]
நம்மில் சிலர் இருக்கிறார்கள் , அவர்கள் ஒவ்வொரு வெள்ளி கிழமை இரவுகளில் சில நல்ல அமல்கள் செய்வார்கள் , தர்காக்கு போவார்கள் அங்கு சென்று யாசின் ஓதுவார்கள் . ஒவ்வொரு வெள்ளி இரவும் மட்டும் தான் செய்வார்கள் .இது நபிகள் நாயகம் [ஸல்]காட்டித் தந்த வழிமுறை அல்ல! அல்லாஹ்வின் திருமறையை ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதி ஓதினாலும் அது நிரந்தரமாக செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என்று அல்லாமல் இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு நாளும் நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும் அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்ய வேண்டும்!
எவன் கைவசம் எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியம் [செய்து கூறுகிறேன்] மக்களை நற்செயலின் பால் அழைத்துக் கொண்டே இருங்கள்.. தீயச் செயல்களை விட்டுத் தடுத்துக் கொண்டே இருங்கள். இப்படிச் செய்யா விடில் , விரைவில் அல்லாஹ்வின் வேதனை உங்களை சூழ்ந்து கொள்ளும்! பிறகு நீங்கள் [மன்னிப்பு வேண்டி அல்லாஹ்வை] அழைத்தாலும் . அவன் கேட்கமாட்டான் .
ஆதாரம்.. திர்மிதி]-25]
ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே செய்து வாருங்கள்.. ஏனெனில் நற்கூலி தருவதில் அல்லாஹ் தளர்வதில்லை ! ஆனால் நீங்கள் நல்ல செயல்கள் புரிந்து, புரிந்து தளர்வடைந்து விடுவீர்கள் ! [கொஞ்சமாக இருந்தாலும் ] நிரந்தரமாகச் செய்து வருவதையே அல்லாஹ் விரும்புகிறான் -அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரியே!
ஆதாரம்.. புகாரி , முஸ்லீம், திர்மிதி, நஸயீ இப்னு மாஜா மற்றும் அபூதாவூத் ]
நம்மில் சிலர் இருக்கிறார்கள் , அவர்கள் ஒவ்வொரு வெள்ளி கிழமை இரவுகளில் சில நல்ல அமல்கள் செய்வார்கள் , தர்காக்கு போவார்கள் அங்கு சென்று யாசின் ஓதுவார்கள் . ஒவ்வொரு வெள்ளி இரவும் மட்டும் தான் செய்வார்கள் .இது நபிகள் நாயகம் [ஸல்]காட்டித் தந்த வழிமுறை அல்ல! அல்லாஹ்வின் திருமறையை ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதி ஓதினாலும் அது நிரந்தரமாக செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என்று அல்லாமல் இன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு நாளும் நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும் அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்ய வேண்டும்!
எவன் கைவசம் எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியம் [செய்து கூறுகிறேன்] மக்களை நற்செயலின் பால் அழைத்துக் கொண்டே இருங்கள்.. தீயச் செயல்களை விட்டுத் தடுத்துக் கொண்டே இருங்கள். இப்படிச் செய்யா விடில் , விரைவில் அல்லாஹ்வின் வேதனை உங்களை சூழ்ந்து கொள்ளும்! பிறகு நீங்கள் [மன்னிப்பு வேண்டி அல்லாஹ்வை] அழைத்தாலும் . அவன் கேட்கமாட்டான் .
ஆதாரம்.. திர்மிதி]-25]