உலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு வரும் தனக்கென்று ஒரு நண்பனை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்த நட்பில் நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் பழகியவரிடம் நற்செயல்களும் தீயவர்களாக இருந்தால் தீமைகள் அவர்களிடம் வெளிப்படுவதையும் பார்க்க முடிகின்றது.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.
பழகுபவர்கள் நமக்கு தீமைகளை கற்று தராவிட்டாலும் அவர்களிடம் பழகியதால் ஏற்பட்ட விளைவுகள் நண்பனின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன.