அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாக திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல், மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்! . அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்துகொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
உண்மை முஸ்லிம் இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச் சுமக்கும் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். ஏனெனில் , ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்க கூடாது.