சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும் விதம்
• இன்றைய காலத்து பெண்கள் தொடர்ந்து காலை, மாலை என நேரம் காலம் அறியாமல் இரவில் தூக்கம் இன்றி இந்த சமூக வலைத்தளங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே இதற்காக நேரத்தை வீண் விரயம் செய்யாது இதற்கான நேர காலத்தை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .
• தூங்கும் போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி விடாமல் 6 மணிநேரம் தூங்க வேண்டும். இது எதிர்காலம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோ நிலை, மூளை செயல்படும் வீதம் போன்ற பல விதமான செயல்பாடுகளுக்கு உதவும்.
• நிகழ்ச்சிகள், இறப்பு செய்திகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக பகிராமல் அதேசமயம் அந்த செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகளை அறிந்த பிறகே பகிர வேண்டும்.