அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
புறம் பேசலாமா ..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறம் பேசலாமா ..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 22, 2016

புறம் பேசலாமா ..?

புறம் பேசலாமா ..?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட கொடியது ... புறம் பேசுவதினால் வாய்க்கு இனிமையாக இருக்கும், நாளை மறுமையில் வேதனை ரொம்ப கடுமையாக இருக்கும்!

''புறம்'' என்பது ஒருவருக்கு முன்னாள் ஒரு விஷயத்தை பேசப்பட்டால் அதை அவர் பொருந்திக் கொள்ளமாட்டாரே  அதற்குத்தான் புறம் என்று கூறப்படும். அவரிடம் அச்செயல் இருந்தாலும் சரிதான் . ஆனால் அவரிடம் இல்லாத விஷயங்களை மற்றவர்களிடம் கூறுவதை ''அபாண்டம்'' என்று கூறப்படும். இதில் இரண்டு விதமான குற்றம் உண்டாகிறது. ஒன்று புறம் பேசின குற்றம்,, மற்றொன்று பொய்  பேசின குற்றம்.  '' உங்களில் சிலர் சிலரை புறம் பேசவேண்டாம்' என்றும்,  ''இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?  அதனை நீங்கள் வெறுப்பீர்களா? என்றும் திருமறையின் கருத்துக்களை நாம் ஓதித்தான்  வருகிறோம் . அதாவது புறம் பேசுவதானது இறந்து போன சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதை போன்றதாகும் என மேற்கண்ட திருமறை வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோமல்லவா?