அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் !!!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் !!!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 11, 2015

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

அல்லாஹ்வின் திருபெயரால் ......

முஸ்லிம் தனது இரட்சகனுடன் 

முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன் , அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு, ஜனவரி 04, 2015

அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கு

அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது
(திருக்குரான் 12:111) என்று அல்லாஹ் தன் இறுதி வேதத்தில் சொல்வதைப் போல்
நம் வரலாறுகளை படிப்பதோடு அதிலிருந்து நாம் படிப்பினையும் பெற வேண்டும்.
நம் வரலாறுகளை நாம் படிக்காமல் அலட்சியப்படுத்தியதின் விளைவு நம்
எதிரிகளால் திரிக்கப்பட்ட வரலாற்றைப்  படித்து கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் இந்தியாவில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய முஹம்மது பின் கஜ்னவியை
கோயிலை இடித்த மத வெறியராகவும் நிர்வாக சீர்திருத்தத்தின் சிங்கமாக
விளங்கிய முஹம்மது பின் துக்ளக்கைகோமாளியாகவும் பார்க்கப் பழகி விட்டோம்.

அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கியக் காரணமான, மால்கம் X என்று
அறியப்படும் மாலிக் அல் ஷாபாஸ் “ தன் கடந்த கால வரலாற்றை அறியாத
சமூகத்தால் புதிய வரலாறை படைக்க இயலாது” என்று கூறியுள்ளார்.

வியாழன், மே 29, 2014

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று இறைவனின் வழி அதுதான் இஸ்லாம்! இரண்டாவது வழி அது ஷைத்தானின் வழி . ஒரு மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும் , அதற்கு அவன் எதையும் வேண்டுமானாலும் வணங்கி வாழ முடியும் . முடிவில் , அவன் நரகத்தில் விழுவான் . ஒரு மனிதன் இப்படிதான் வாழ வேண்டும் என்று நினைத்து ஒரு வழியை தேர்வுச் செய்கிறான் , அந்த வழி இறைவன் காட்டிய வழியாக இருந்தால் அவன் இஸ்லாத்தை நோக்கி வருவான் , அவன் முஸ்லிமாக மாறுவான் . ஒவ்வொரு மனிதர்களும் இஸ்லாத்தை அறிந்துக் கொண்டு , ஆராயிந்து இஸ்லாத்தில் இணைகிறார்கள். இஸ்லாத்த்தின்ப்படி வாழ்கிறார்கள் . பிறப்பினால் முஸ்லிமாக இருக்கும் நாம் எந்தளவுக்கு இஸ்லாத்தை பின்பற்றுகிறோம் என்பது ஒரு கேள்விகுரியாகதான் இருக்கிறது. சிலர் பெயர் தாங்கி முஸ்லிமாக இருக்கிறார்கள் , இன்னும் சிலர் பெயருக்காக முஸ்லிமாக வாழ்கிறார்கள் , மற்ற சிலர் உண்மையான முஃமினாக இருந்தும் , வாழ்ந்துக் காட்டுகிறார்கள் . மூன்றாவதாக தான் நாம் இருக்க வேண்டும்.

புதன், ஏப்ரல் 30, 2014

ஓய்வு பெற்றவராவார் அல்லது ஓய்வு அளித்தவராவார்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் அனைவரும் அல்லாஹ்வின் கிருபையால் ,கருணையால் கலிமாவுடன் மரணிக்க வேண்டும். நம் மண்ணறை  சுவனத்தின் பூங்காவாக இருக்க வேண்டும். நல்லடியார்களின் கூட்டத்தில் ஆக்கி சேர்க்க வேண்டும். நல்லடியார்களின் கூட்டத்தில் மறுமையில் எழுப்ப வேண்டும். அண்ணல் நபி [ஸல்] அவர்களுடன் சுவனத்தில் இருக்க நற்கிருபைச் செய்ய வேண்டும். ஆமீன்.........

புதன், ஜனவரி 01, 2014

உண்மையும் பொய்யும் ! சுவனம்! அதில் உள்ள அருட்கொடைகள் !


உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் இழுத்துச்  செல்கிறது. நன்மை சொர்க்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கின்றது . நிச்சயமாக ஒருவர் உண்மையே பேசிக் கொண்டிருந்தாள் இறைவனிடத்தில் சித்தீக் உண்மையாளர் என்று எழுதப்பட்டு விடும்.
நூல்கள்: புகாரி; முஸ்லிம்.

சனி, டிசம்பர் 14, 2013

பகைமை உணர்வும் பழிவாங்கும் குணமும்!



ஒரு குழந்தைக்கு உதாரணம்: ஒரு வெள்ளை பலகை போல அதில் நாம் என்ன எழுதுகிறோம் அதுதான் பிரதிப்பளிக்கும் . தீய வார்த்தைகள் எழுதினால் அதுதான் அங்கே பிரதிப்பளிக்கும் மாறாக நல்ல வார்த்தைகளை (கனிவான சொற்கள் ,அன்பான சொற்கள் ) எழுதினால் அங்கே அதுதான் பிரதிப்பளிக்கும். குழந்தையின் உள்ளம் ஒரு வெள்ளை பலகை போல அதிலே பெற்றோர்களாகிய நாம் (ஆசிரியர்கள்) நல்லதை மட்டும் விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் நன்மைகளை அறுவடைச் செய்ய முடியும்! இது என் சொந்த கருத்து!

திங்கள், ஜூலை 01, 2013

ஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் !!!!

நபியவர்கள் நவின்றதாக அபூ ஸயீது (ரலி) ,அபூ ஹுர்ரைரா (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களும் அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்ட்டம் , நோய் ,கவலை ,நோவினை ,துக்கம்-அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை -அவை அனைத்துக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை  .ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :அல்லாஹ் எவருக்கு நலவை நாடுகிறானோ அவரை அவன் சோதிக்கிறான்.
 ஆதாரம்: புகாரி)