ஆண்ட்ராய்டு போன்களும் சமூக வலைதளங்களும் வந்தாலும் வந்தது, அதன்மூலம் அதிகமதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கின்றார்கள். சமூக வலைதளங்களின் பெருக்கத்தாலும் இணையப் பயன்பாடு அதிகரித்த காரணத்தாலும் ஒரு பக்கம் உலகம் மிக வேகமாகப் பயணம் செய்து வந்தாலும் மற்றொரு புறத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களால் அப்பாவி பெண்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசப் படமெடுத்து அவர்களிடம் இருக்கும் பணம் நகைகளைக் கொள்ளையடித்து இதற்கெல்லாம் உடன்படாத பட்சத்தில் அவர்களைக் கொலை செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருகின்றன.