அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இது கதை அல்ல நிஜம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இது கதை அல்ல நிஜம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 29, 2020

பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள்



ஆண்ட்ராய்டு போன்களும் சமூக வலைதளங்களும் வந்தாலும் வந்தது, அதன்மூலம் அதிகமதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கின்றார்கள். சமூக வலைதளங்களின் பெருக்கத்தாலும் இணையப் பயன்பாடு அதிகரித்த காரணத்தாலும் ஒரு பக்கம் உலகம் மிக வேகமாகப் பயணம் செய்து வந்தாலும் மற்றொரு புறத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களால் அப்பாவி பெண்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசப் படமெடுத்து அவர்களிடம் இருக்கும் பணம் நகைகளைக் கொள்ளையடித்து இதற்கெல்லாம் உடன்படாத பட்சத்தில் அவர்களைக் கொலை செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருகின்றன.

வியாழன், மே 28, 2020

சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

???? முதலில் வலப்பக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், இடைவெளி விட்டு மீண்டும்,இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்க போகும் நேரத்தை முடிவு செய்துவிட்டது என்று அர்த்தம்,

???? புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இது வரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதராத்தை அழிக்கும். அது பனிக்குடத்தை உடைத்தல். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்..

ஞாயிறு, மே 17, 2015

உள்ளம் தொடும் ஒரு கதை



இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது.

உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்

நாள் முழுதும் வேலை,மிக மிக களைப்பாக இருந்தேன்.
திடீரென இடி முழக்கம் போலொரு சப்தம்.திடுக்கிட்டெழுந்தேன்.

இது என்ன? வியர்த்து வியர்த்துக் கொட்டுகிறது.
எல்லாப்பக்கம் சன சமுத்திரம்.

ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

மரணிக்கும்போதும் மண்ணறையில் நிகழ்பவைகளும்

அல்லாஹ் கூறுகிறான்: – ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே
இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம்
உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
(அல்-குர்ஆன் 21:35)

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது.
நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும்
அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே
மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும்
மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக்
கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய
நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வியாழன், ஜனவரி 08, 2015

காலத்தின் மீது சத்தியமாக

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் .......

காலம் பொன்போன்றது . போன நேரம் திரும்பாது என்று தமிழில் பழமொழி கூறுவார்கள்.   இஸ்லாத்தில் பொருள்களை , உணவுகளை வீண் விரயம் செய்யக் கூடாது, அதுபோன்றுதான் காலமும் . அந்த காலத்தை நாம் வீண் விரயம் செய்யக் கூடாது.  எப்படி காலத்தை வீண் விரயம் செய்வோம் என்பது ஒரு கேள்வி தோன்றும்.?  ஒரு திருமணத்தில் நாம் விருந்துக்கு சாப்பிடுவதற்காக அமர்வோம் . அப்பொழுது உணவு பரிமாறப்படும் . கொடுத்த உணவை நாம் சாப்பிட்டுவிட்டால் , மிச்சம் மீதி இல்லாமல் . அல்ஹம்துலில்லாஹ் !  கொடுத்த உணவை மிச்சம் வைத்து விட்டால் , அது விரயம் .  உண்ணுங்கள் , பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் . வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.  காலம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது . சிலருக்கு நீண்ட காலம் , இன்னும் சிலருக்கு குறைவான காலம்.  கொடுக்கப்பட்ட காலத்தை நாம் எப்படி கழிப்பது என்பது தான் ரொம்ப முக்கியம் .
அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகின்றான்..

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

இஸ்லாம் கூறும் மண்ணறை வேதனையைப் பற்றி அறிந்து கொள்ளும்படியான சில நபிமொழிகள்:



எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20:124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டணை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 3174

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.

திங்கள், அக்டோபர் 20, 2014

இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று தண்ணீர்

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

தண்ணீரின் தேவை

உடலின் ஒவ்வொரு செல்லும் ஆற்றுகின்ற ஒப்பற்ற பணிகளுக்கு இன்றியமையாத பொருளாகத் தண்ணீர் திகழ்வதோடு , உடலியக்கம் தோற்றுவிக்கும் பல நச்சுப் பொருட்கலிருந்து உடலைப் பாதுகாக்கும் கேடயமாகவும் விளங்குகிறது.

சனி, ஆகஸ்ட் 16, 2014

உணவின் வீண் விரயம்

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன் தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141.

சனி, மார்ச் 01, 2014

இறை தூதர் சிறப்பித்த ஜனாஸாக்கள் 

அல்லாஹ்வின் திருபெயரால் ........
அன்பு சகோதர /சகோதரிகளே! சஹாபாக்களின் சிறப்புகள் , அவர்கள் வாழ்ந்த வாழ்வு , அவர்கள் அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பு ம் நேசம் ,பாசம் . அவர்களைப் போன்று நாமும் மாற வேண்டும் என்ற ஆசையுடன் இந்த கட்டுரையை எழுதுகிறேன் ........

சனி, பிப்ரவரி 22, 2014

மரணத்திலும் சஜ்தா ! மண்ணறையிலும் சஜ்தா !!


மரணத்திலும் சஜ்தா! மண்ணறையிலும் சஜ்தா!
அல்லாஹ்வின் திருபெயரால் ..........
இது கதை அல்ல ! நிஜம்
"அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில் ) பலவீனத்திலிருந்து குழந்தைத் தன்மையில் படைத்தான் . அதன் பின் பலவீனத்துக்கு பின்னர் பலத்தை உண்டாக்கினான் . பின்னர் பலத்துக்குப் பிறகு மீண்டும் பலவீனத்தையும் அத்துடன் முதுமையையும்  உண்டாக்கினான் . இவ்வாறு தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்  ஆற்றல்மிக்கவன் ."
அல்குர் ஆன் :36:54

சனி, ஜனவரி 18, 2014

பெற்றோர்களே கொஞ்சம் நில்லுங்கள் !





நன்றி சுன்னத் ஜமாஅத் .ப்ளாக்
http :// sunnathjamath .blogspot .com
ஒரு நல்ல அருமையான கட்டுரை .ஒவ்வொரு பெற்றோர்களும் அவசிய அறிய வேண்டிய சில விடயங்கள் .நீங்கள் கட்டாயத்தில் இப்பொழுது இருக்கிறீர்கள் , அவையம் நீங்கள் படித்து ஆக வேண்டும் .அல்லாஹ்உங்களுக்கு அருள்பாலிபானாக!ஆமீன் ............

சனி, ஜனவரி 11, 2014

வாழ்க்கையின் பொருள் ...




அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்....
அல்லாஹ் நம்மை மனிதனாக படைத்ததற்கு அல்லாஹுக்கே எல்லாப் புகழும்!
அல்லாஹ் நம்மை முஸ்லிமாக பிறக்கவைத்தான் அல்லாஹுக்கே எல்லாப் புகழும்!
அல்லாஹ் நம்மை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக ஆக்கி வைத்தான் அல்லாஹுக்கே எல்லாப் புகழும்!
நாம் முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் ???

வியாழன், நவம்பர் 21, 2013

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

இது கதை அல்ல நிஜம் !


அல்லாஹு தஆலா கூறுகிறான்:

நரகத்தை நோக்கி , "" நீ நிறைந்து விட்டாயா ? என்று நாம் கேட்டு ,அதற்க்கு அது '' இன்னும் அதிகமாக ஏதும் இருகின்றதா ? என்று கேட்க்கும் அந்தநாளை (நபியே நீர் நினைவுருத்துவீராக )!
அன்றியும் அந்நாளில் ) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும் .