அல்லாஹ்வின் திருபெயரால் .............
தாயின் காலடியில் சுவனத்தைக் காட்டினார் சுந்தர நபி [ஸல்] அவர்கள் . நபி [ஸல்] அவர்கள், முஹாஜிரீன்களையும் , அன்சாரிகளையும் நோக்கி உங்கள் மனைவியரின் பேச்சைக் கேட்டு உங்கள் பெற்றோர் மனதை புண்படுத்தாதீர்கள் . அவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வும், விண்ணவரும் சபிக்கின்றனர் . அவர்களின் ஃ பர்லான , நஃபிலான வணக்கங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் . ஒரு மனிதர் , நாதர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து, 'நான் நல்லுறவு கொண்டாட மிகவும் உரிமையுடையவர் யார்? மும்முறை வினவியபோது , உன் அன்னை என்று பதிலிருத்தினார்கள் . ஆம்! தாயன்புக்கு நிகராக வேறெதுவும் இல்லை. எட்டி உதைக்கும் சேயை கட்டியணைக்கும் தாய் தியாகச் சுடர் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
இத்தகைய சிறப்புமிக்க அன்னையையே இன்று பல இல்லங்களில் பிரச்சனையாக்கி விட்டனர். குறிப்பாக முதுமையடைந்த நிலையில் , பெற்ற செல்வங்களே பெருஞ்சுமையாகக் கருதி, வசைபாடி வெளியேற்றுவதும், 'தொலைந்து போ' எனத் திட்டுவதும் , முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு கவனிக்காமல் இருப்பதும் இன்றைய சீர்கெட்ட ஒழுங்குமுறைகளாகி விட்டன. இதனை தாயின் மேலான கருணையாளனான ரஹ்மான் முற்றிலும் வெறுக்கிறான். தாயிடம் பணம் கேட்டு வருத்தி குடி, கூத்துகளில் , வீண் ஆடம்பரங்களில் தாயின் பணத்தையும் , சொத்தையும் வற்புறுத்தி பெற்றுக் கொள்ளும் கயவர்களும் உள்ளனர். தராவிட்டால் கொலை செய்து அபகரிப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான் . தாய் வசதியற்ற நிலையில் இருந்தால் , அவளது உயிர் ஆதாரமாய் விளங்கும் உண்டிக்கும் , உடைக்கும் , உறைவிடத்திற்கும் யாரிடம் கேட்க இயலுமா? தான் பெற்ற சீராக , நேராக வளத்த பிள்ளைகளிடம் தானே. ஆனால் பிள்ளைகள் தர மறுப்பது பாவங்களின் பட்டியலில் இடம் பெறவைக்கும் இழி செயலாகும்.
இறுதியாக வரலாறு காணாத முன்னேற்றத்தை கண்டு வரும் சமுதாயம் , பெண் சிசுக்களுக்கு கருவறைகளை கல்லறைகலாக்கி விடும் கொடூரமும் , கள்ளிப்பாலை தாயின் பாலாக வார்த்து பெண் சிசுவின் உயிரைப் பறித்து விடுவதும் , செய்திகள் சொல்லும் சாட்சி . இதனால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைந்து விட்டதால் , பாலியல் வன்கொடுமைகள் மலிந்து விட்டன . லூத் நபியால் சபிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு உரிமம் வழங்கப்பட்டு, இயற்கையின் தன்மை நசுக்கப்பட்டு வருகிறது.
தாய் உயிருடன் இருக்கும்போது அவளின் அருமை , பெருமை பெற்ற பிள்ளைகளுக்கு தெரியாது. அந்த தாய் இறந்தபின்புதான் அவர்கள் உணர்வார்கள் , ஒப்பாரி வைப்பார்கள் . இந்த செயல் இன்னும் நம் சமுதாயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..
அஸ்மா [ரலி] அவர்கள் கூறினார்கள் .. நபி [ஸல்] அவர்களின் காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் அன்னை ஒரு முறை என்னிடம் வந்திருந்தார் . இதுப்பற்றி நபி [ஸல்] அவர்களிடம் சென்று '' எனது தாய் மிக ஆவலுடன் [உதவி கேட்டு ] என்னிடம் வந்திருக்கிறார். எனது அன்னைக்கு உபகாரம் செய்யலாமா? என வினவினேன். நபி [ஸல்] அவர்கள் ''ஆம்! உன் அன்னைக்கு உபகாரம் செய்'' என்று கூறினார்கள்.
ஒருவர் சயீது இப்னு முஸைய்யப் [ரஹ் ] அவர்களிடம் ''நான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய அனைத்து வசனங்களையும் புரிந்து கொண்டேன் . ஆனால் அவர்களிடம் மிக்க கண்ணியமாக பேசுவீராக! என்ற திருவசனத்தின் பொருள் மட்டும் விளங்கவில்லை '' என்றார் . சயீது [ரஹ் ] அவருக்கு ''அவ்விருவருடன் உரையாடும்போது ஒரு அடிமை தனது எஜமானிடம் பேசுவது போன்று உரையாட வேண்டும் '' என்று விளக்கமளித்தார்.
இப்னு ஸீரீன் [ரஹ் ] அவர்கள் தனது தாயுடன் உரையாடும்போது கண்ணியப்படுத்தும் விதமாக மிக மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது அவர்களது குரல் ஒரு நோயாளியின் குரலைப் போன்று இருக்கும்.
இன்னும் இதுப் போன்ற சம்பவங்கள் , அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறிய பொன்மொழிகள் இன்னும் அதிகம் அதிகம் என்று சொல்லாம்.....
அல்லாஹ் மிக அறிந்தவன் .
நன்றி நர்கீஸ்
தாயின் காலடியில் சுவனத்தைக் காட்டினார் சுந்தர நபி [ஸல்] அவர்கள் . நபி [ஸல்] அவர்கள், முஹாஜிரீன்களையும் , அன்சாரிகளையும் நோக்கி உங்கள் மனைவியரின் பேச்சைக் கேட்டு உங்கள் பெற்றோர் மனதை புண்படுத்தாதீர்கள் . அவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வும், விண்ணவரும் சபிக்கின்றனர் . அவர்களின் ஃ பர்லான , நஃபிலான வணக்கங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் . ஒரு மனிதர் , நாதர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து, 'நான் நல்லுறவு கொண்டாட மிகவும் உரிமையுடையவர் யார்? மும்முறை வினவியபோது , உன் அன்னை என்று பதிலிருத்தினார்கள் . ஆம்! தாயன்புக்கு நிகராக வேறெதுவும் இல்லை. எட்டி உதைக்கும் சேயை கட்டியணைக்கும் தாய் தியாகச் சுடர் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
இத்தகைய சிறப்புமிக்க அன்னையையே இன்று பல இல்லங்களில் பிரச்சனையாக்கி விட்டனர். குறிப்பாக முதுமையடைந்த நிலையில் , பெற்ற செல்வங்களே பெருஞ்சுமையாகக் கருதி, வசைபாடி வெளியேற்றுவதும், 'தொலைந்து போ' எனத் திட்டுவதும் , முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு கவனிக்காமல் இருப்பதும் இன்றைய சீர்கெட்ட ஒழுங்குமுறைகளாகி விட்டன. இதனை தாயின் மேலான கருணையாளனான ரஹ்மான் முற்றிலும் வெறுக்கிறான். தாயிடம் பணம் கேட்டு வருத்தி குடி, கூத்துகளில் , வீண் ஆடம்பரங்களில் தாயின் பணத்தையும் , சொத்தையும் வற்புறுத்தி பெற்றுக் கொள்ளும் கயவர்களும் உள்ளனர். தராவிட்டால் கொலை செய்து அபகரிப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான் . தாய் வசதியற்ற நிலையில் இருந்தால் , அவளது உயிர் ஆதாரமாய் விளங்கும் உண்டிக்கும் , உடைக்கும் , உறைவிடத்திற்கும் யாரிடம் கேட்க இயலுமா? தான் பெற்ற சீராக , நேராக வளத்த பிள்ளைகளிடம் தானே. ஆனால் பிள்ளைகள் தர மறுப்பது பாவங்களின் பட்டியலில் இடம் பெறவைக்கும் இழி செயலாகும்.
இறுதியாக வரலாறு காணாத முன்னேற்றத்தை கண்டு வரும் சமுதாயம் , பெண் சிசுக்களுக்கு கருவறைகளை கல்லறைகலாக்கி விடும் கொடூரமும் , கள்ளிப்பாலை தாயின் பாலாக வார்த்து பெண் சிசுவின் உயிரைப் பறித்து விடுவதும் , செய்திகள் சொல்லும் சாட்சி . இதனால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைந்து விட்டதால் , பாலியல் வன்கொடுமைகள் மலிந்து விட்டன . லூத் நபியால் சபிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கைக்கு உரிமம் வழங்கப்பட்டு, இயற்கையின் தன்மை நசுக்கப்பட்டு வருகிறது.
தாய் உயிருடன் இருக்கும்போது அவளின் அருமை , பெருமை பெற்ற பிள்ளைகளுக்கு தெரியாது. அந்த தாய் இறந்தபின்புதான் அவர்கள் உணர்வார்கள் , ஒப்பாரி வைப்பார்கள் . இந்த செயல் இன்னும் நம் சமுதாயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..
அஸ்மா [ரலி] அவர்கள் கூறினார்கள் .. நபி [ஸல்] அவர்களின் காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் அன்னை ஒரு முறை என்னிடம் வந்திருந்தார் . இதுப்பற்றி நபி [ஸல்] அவர்களிடம் சென்று '' எனது தாய் மிக ஆவலுடன் [உதவி கேட்டு ] என்னிடம் வந்திருக்கிறார். எனது அன்னைக்கு உபகாரம் செய்யலாமா? என வினவினேன். நபி [ஸல்] அவர்கள் ''ஆம்! உன் அன்னைக்கு உபகாரம் செய்'' என்று கூறினார்கள்.
ஒருவர் சயீது இப்னு முஸைய்யப் [ரஹ் ] அவர்களிடம் ''நான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய அனைத்து வசனங்களையும் புரிந்து கொண்டேன் . ஆனால் அவர்களிடம் மிக்க கண்ணியமாக பேசுவீராக! என்ற திருவசனத்தின் பொருள் மட்டும் விளங்கவில்லை '' என்றார் . சயீது [ரஹ் ] அவருக்கு ''அவ்விருவருடன் உரையாடும்போது ஒரு அடிமை தனது எஜமானிடம் பேசுவது போன்று உரையாட வேண்டும் '' என்று விளக்கமளித்தார்.
இப்னு ஸீரீன் [ரஹ் ] அவர்கள் தனது தாயுடன் உரையாடும்போது கண்ணியப்படுத்தும் விதமாக மிக மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது அவர்களது குரல் ஒரு நோயாளியின் குரலைப் போன்று இருக்கும்.
இன்னும் இதுப் போன்ற சம்பவங்கள் , அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறிய பொன்மொழிகள் இன்னும் அதிகம் அதிகம் என்று சொல்லாம்.....
அல்லாஹ் மிக அறிந்தவன் .
நன்றி நர்கீஸ்
உயர்ந்த மனிதருள் மாணிக்கம்...
பதிலளிநீக்கு